Tuesday, September 23, 2014

என் தாயும் என் சகோதரர்களும்

அவர் அவர்களைப் பார்த்து, 'இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுபவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்' என்றார். (லூக்கா 8:21)

இயேசு தன் தாயாகவும், சீடர்களாகவும் நாம் மாறுவதற்கு இரண்டு எளிய வழிமுறைகளைச் சொல்கின்றார்:

அ. இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.
ஆ. அவரின் அருகில் இருக்க வேண்டும்.

இன்று நாம் யாரையெல்லாம் சொந்தம் என நினைக்கின்றோம்? இன்றைய உலகில் சொந்தம் என்பது வெறும் எண்களைப் பொறுத்தே இருக்கின்றது. வாட்ஸ் ஆப்பில் உள்ள கான்டக்ட்சும், ஃபேஸ்புக்கில் உள்ள ஃரெண்ஸ்சும், ப்ளாக்கில் உள்ள வியூவர்சும் தான் நம் சொந்தம் என்று எண்களை வைத்து மாயையை உருவாக்குகிறது இன்றைய சமூகத்தொடர்பு.

The family of Jesus is characterized not by quantity but by quality.


1 comment:

  1. ,கடுகு சிறுத்தாலும் காரம் போகாது' என்று சொல்வார்கள்.இரத்தினச் சுருக்கமாக வந்து விழுந்த அந்த இறுதி வரிகள்...." The family of Jesus is characterized not by quantity but by quality." உண்மையான வார்த்தைகள்....பாராட்டுக்களும்...அதிகாலை வணக்கங்களும்....

    ReplyDelete