Tuesday, January 12, 2016

சாமுவேல்

சிறுவன் சாமுவேல் இப்போது ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவரின் இல்லத்தில் வளர்கிறான்.

அவனுக்கு கடவுளின் வெளிப்பாடு அருளப்படுவதை நாளைய முதல்வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.

மூன்று விஷயங்களை நாம் இங்கே கவனிக்க வேண்டும்:

அ. விளக்கும் கண்களும். கடவுளின் ஆலயத்தில் விளக்கும் அணைந்தும், அணையாமல் மின்னிக் கொண்டிருக்கிறது. ஏலியின் கண்பார்வையும் மங்கிக் கொண்டிருக்கிறது.

ஆ. 'ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்!' - இப்படி போய் நீ சொல்! என சாமுவேலுக்கு கட்டளையிடுகிறார் ஏலி. ஆனால், சிறுவன் என்ன சொல்கிறான் கவனித்தீர்களா? 'பேசும்! உம் அடியான் கேட்கிறேன்!' என்கிறான். 'ஆண்டவரே' என்னும் வார்த்தையை விட்டுவிடுகிறான்.

இ. ஆண்டவர் பேசுகிறார். சாமுவேலும் கேட்கிறான். ஆனால், என்ன பேசினார் என்பது நமக்கு கொடுக்கப்படவில்லை.

...
...

சாமுவேலின் இறைவாக்குப் பணி வாழ்வில் இது முக்கியமான கட்டம்.

வீட்டிலிருந்து புறப்பட்டு ஆலயத்திற்கு வந்து இருந்தால் மட்டும் ஒருவருக்கு கடவுளின் இறைவாக்கு வந்துவிடாது. மாறாக, அவர், தானாகவே இறைவனின் குரலைக் கேட்க வேண்டும்.

அருட்பணியாளர்கள் மற்றும் பயிற்சி வாழ்விற்கும் இது பொருந்தும்.

இன்று (ஜனவரி 12) விவேகானந்தரின் பிறந்தாள் விழா.

அவரைப் பற்றிய ஒரு அழகான கட்டுரையை விகடன் இணையதளத்தில் வாசித்தேன்.

அ. துறவு என்பது அனைவரையும் சகோதர, சகோதரிகளாகப் பார்க்கும் பரந்த நிலை.
ஆ. மனதை ஒருமுகப்படுத்துவது. ஒருமுறை முடிவு செய்துவிட்டால் அதிலிருந்து பின்வாங்காமல் இருப்பது.

இ. தேக்க நிலையை அடையாமல் முன்னேறிக்கொண்டு இருப்பது. அறிவோ, ஆன்மீகமோ தொடர் தேடல் அவசியம்.

இந்த மூன்றும் நாளை சாமுவேலின் வாழ்வில் தொடங்குகிறது.

3 comments:

  1. சிறுவன் சாமுவேலுக்கு இறைவனின் வெளிப்பாடு அருளப்படுவதில் தொடங்கி அதை விவேகானந்தரின் வாழ்க்கையுடன் ஒப்பிடும் தந்தையின் சாமர்த்தியம் பாராட்டுக்குரியது. நாம் இருக்கும் இடத்தின் முக்கியத்துவத்தை விடக் கேட்கும் குரலின் முக்கியத்துவமே பெரிது என ஆணித்தரமாக அடித்துக்கூறுகிறார்.வாழ்க்கையின் வெற்றுச் சந்தடிகளினூடே நமக்கு " இறைவன் குரல்" கேட்குமெனில் அதை யார்தான் தடுக்க இயலும்? ஆன்மீகத்தின் தேடலாக தந்தை உணர்த்தும் பல விஷயங்களில் " அறிவோ,ஆன்மீகமோ தொடர்தேடல் அவசியம்" என்பதே என் மனத்துக்கு நெருக்கமாக உள்ளது. தேடல் என்ற ஒன்றைத் தேடத்தொடங்கி விட்ட யாருமே ஒரு " ஆன்ம யோகி" தான். என்னை உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பிய தந்தைக்கு என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்!!!

    ReplyDelete
  2. Dear Father,Very good sharing on Samuel.Let us keep up our innocence and holiness in order to listen God's voice as Samuel.

    Congrats Father.

    ReplyDelete
  3. Dear Father,I am Suganthi very nice for all religious good lesson some Samuel Story

    ReplyDelete