Wednesday, March 5, 2014

வாழ்த்துக்கள்...


இன்றைக்கு நெல்சன் மண்டேலா அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை வாசித்தேன்.

40 பக்கப் புத்தகத்தில் என்னை ஒரு வரி மிகவும் தொட்டது:

"It always seems impossible until it is done."

நாளை முதல் தவக்காலத்தைத் தொடங்குகிறோம்.

நாற்பது நாட்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பேன் என்று ஒவ்வொரு வருடம் நினைத்து ஏதாவது ஒருநாள் தடைபட்டுப் போயிருக்கின்றது.

இந்த வருடம் முயற்சி செய்து பார்ப்பேன்.

'Impracticality is the vocabulary of a mediocre who does not want to change,' என்பார் டி.டி. ரங்கராஜன்.

எல்லாமே ப்ராக்டிகல் தான். எல்லாமே பாசிபிள் தான்.

மற்றொரு குட்நியூஸ்.

இன்றைக்கு நம் blog 10000 வாசகர்களைத் தொட்டுவிட்டது.

வாழ்த்துக்கள்.

தொடர்ந்து வாழ்த்துங்கள். வளர்கிறேன்!

நன்றி.

3 comments:

  1. Anonymous3/05/2014

    பாராட்டப்பட வேண்டிய சாதனை.உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வாழ்த்துகிறேன்.தங்களைக் கருவியாக்கி பல இதயங்களோடு பேசிய இறைவனுக்கு நன்றி.இறைவன் தங்களையும்,தங்கள் குருத்துவத்தையும் ஆசீர்வதித்து,நல்ல உடல் உள்ள சுகம் தந்து தங்கள் வழியாக மேலும் பல நல்ல பணிகளைத் தொடர்வாராக.டி.டி.ரங்கராஜனின் வார்த்தைகள் அருமை.இந்த தவக்காலத்தில் முடிந்ததை முயற்சி செய்வோம்.மீண்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. Anonymous3/05/2014

    வாழ்த்துக்கள்! இயேசு கிறிஸ்துவின் இறை அன்பும், தூய ஆவியின் வல்லமையும் காலம் முழுவதும் உங்களோடு இருப்பதாக. உங்கள் பணி தொடர எம் வாழ்த்துக்கள்.

    ReplyDelete