Tuesday, March 25, 2014

ஏதாவது ஐடியா இருந்தா!

சின்ன வயசிலேயே சாதிச்சவங்க பற்றி இன்றைக்கு நான் யோசிச்சுகிட்டு இருந்தேன்.

எபிரேய இலக்கியத்தில் புலமை பெற்ற ஒருவரின் வாழ்க்கை வரலாறை வாசித்தேன். அவர் ஒரு இங்கிலாந்துக்காரர். தன் 28ஆம் வயதிலேயே எபிரேய இலக்கணம் என்னும் நூலை எழுதியிருக்கின்றார். நாம் ஏன் ஏதாவது சாதிக்கக் கூடாது? என்ற நினைத்தேன்.

நேற்று ஒரு நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன். நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தேன். ஏனெனில் நேற்று இரவு தூக்கமே இல்லை. நான் ஃபோனை வைத்தபோது அவனது மகன் பள்ளிக்கூடம் புறப்பட்டுக்கொண்டிருந்தான். ஃபோனை வைக்கும் போது சொன்னான்: இவ்வளவு நேரம் பேசுகிறாயே! இரவு நேரத்திலும் இவ்வளவு எனர்ஜி லெவல் இருக்கிறதே, நீ ஏன் உருப்படியாக ஏதாவது செய்யக்கூடாது? இன்று மனதெல்லாம் அவன் சொன்னதே நிறைந்திருந்தது.

ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்களேன்....

செய்வோம்...

4 comments:

  1. உங்களுடைய சிந்தனைகள் மிகவும் இயல்பாகவும் அருமையாகவும் உள்ளது இவற்றை தொகுத்து ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. தங்களின் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

      தங்களின் எண்ணம் போல் செய்வோம்.

      Delete
  2. Anonymous3/25/2014

    Hello father! இன்றைய blog கூட ஏதோ ஒரு செய்தியை சொல்கிறது.விளையும் பூமிக்கு கூட ஓய்வு தேவைப்படுகிறது அடுத்த விளைச்சலுக்கு முன்.விவிலியத்திலும் கூட'வாருங்கள் சிறிது இளைப்பாறுவோம்' என்னும் வரிகளைப் பார்க்கிறோம்.இப்பொழுது தங்களுக்குத் தேவை சிறிது ஓய்வு.தங்கள் மூளைக்கும் சிறிது ஓய்வு கொடுத்து புதுப்பொலிவோடு வாருங்கள்.....இறைவனின் நிறைவான ஆசியோடு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. தங்களின் தாயுள்ளத்திற்கு நன்றி.

    விரைவில் சந்திப்போம்.

    ReplyDelete