Tuesday, December 29, 2015

அன்னா பானுவேலின் மகள்

நாளைய நற்செய்தியில் எருசலேம் ஆலயத்தில் நாம் சந்திக்கும் நபர் அன்னா.

லூக்கா தன் நற்செய்தியில் பயன்படுத்தும் ஒரு இலக்கிய பண்பு: 'இணைத்தல்' - அதாவது இரண்டு நிகழ்வுகளை ஒன்றுபோல பதிவு செய்தல். எ.கா. சக்கரியாவுக்கு காட்சி - மரியாளுக்கு காட்சி, யோவானின் பிறப்பு - இயேசுவின் பிறப்பு.

இயேசுவை எருசலேம் ஆலயத்தில் அவர்களின் பெற்றோர்கள் அர்ப்பணிக்கும் நிகழ்வில் இரண்டு வகை இணைதலை நாம் பார்க்கிறோம்:

ஒன்று, ஆண்-பெண். அதாவது, சிமியோன்-அன்னா. இயேசு முதன்முதலாக எருசலேமுக்குள் நுழையும் இந்த நிகழ்வில் ஆண்கள் சார்பாக ஒருவர். பெண்கள் சார்பாக ஒருவர்.

இரண்டு, ஆண்-பெண்கள். சீமோன்-எருசலேம் மகளிர். இயேசு இறுதியாக எருசலேமை  விட்டு நீங்கும் நிகழ்வில், ஆண்கள் சார்பாக ஒருவர். பெண்கள் சார்பாக சிலர்.

சிமியோன் - சீமோன்.

அன்னா - மகளிர்.

இப்படியாக முதல் நிகழ்வை இறுதி நிகழ்வோடு இணைக்கிறார் லூக்கா.

அன்னா ஆலயத்திலேயே இருக்கிறார். அன்னா குழந்தையைக் கையில் ஏந்தவில்லை. அன்னா ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

அன்னா பானுவேலின் மகள். 'பானுவேல்' என்றால் 'கடவுளின் முகம்' என்று பொருள்.

ஏழு ஆண்டுகள் கணவனோடு வாழ்ந்தார்.

அவரின் வயது 84. அதாவது, 7 பெருக்கல் 12. முழுமையையும், முழுமைiயும் பெருக்கினால் வரும் எண் 84.

இவர் குழந்தையைப் பற்றி எல்லாரிடமும் சொல்கிறார்.

இதைத்தான் நம்ம ஊர் கிராமங்களில் பாட்டிமார்களும் சொல்வார்கள்.

இவர்கள் செய்தித்தாள் வாசிப்பதில்லை. டிவி பார்ப்பதில்லை. ஆனால், எல்லா விவரமும் இவர்களுக்குத் தெரியும். உலக விவகாரங்கள் இவர்களுக்கு முக்கியமல்ல. ஊரில் உள்ள பிறப்பு, இறப்பு, இழப்பு என அனைத்தையும் இவர்கள் அறிவார்கள்.

பிறந்த குழந்தையை இவர்களிடம் காட்டினால் வாய்நிறைய வாழ்த்துவார்கள்.

3 comments:

  1. விவிலியத்தின் பக்கங்களை அவற்றின் அர்த்தம் மாறாமலும்,மிகாமலும் கொடுத்து வந்த தந்தை இன்று உதிரிப்பூக்களாக சில விஷயங்களை அள்ளித் தெளிக்கிறார்.முதல் நிகழ்வின் சிமியோனை சீமோனோடும், அன்னாவை எருசலேம் பட்டணத்து மகளிரோடும் ஒப்பிடுகிறார்.இறைவன் நேரடிப் பார்வையிலிருப்பவர்களுக்கு உடல் வலிமை ஒரு பொருட்டல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறார் அன்னா.இந்த அன்னாவை நம்மூர்ப் பெண்களோடு ஒப்பிடும் தந்தை இப்பெண்களுக்குத் தேவையெல்லாம் தங்கள் இனத்தவரின் பிறப்பு,இறப்பு,இழப்பு தானேயன்றி நாட்டு நடப்பல்ல என்கிறார்.நம்மூர் பெண்களும் இவர்களைப் பின் பற்றினால் உலகில் பாதிப் பிரச்சனைகள் குறைய வழியுண்டு.இல்லையா ஃபாதர்?

    ReplyDelete
  2. Anonymous7/28/2023

    Super 👌

    ReplyDelete