Thursday, July 23, 2020

இதயத்திற்கேற்ற மேய்ப்பர்

இன்றைய (24 ஜூலை 2020) முதல் வாசகம் (எரே 3:14-17)

இதயத்திற்கேற்ற மேய்ப்பர்

நேற்றைய முதல் வாசகத்தின் தொடர்ச்சியாக உள்ளது இன்றைய வாசகம். அங்கே, நான்கு வகையான மேய்ப்பர்களைப் பற்றி ஆண்டவராகிய கடவுள் குறிப்பிடுகின்றார்:

(அ) குருக்கள்

(ஆ) திருச்சட்டத்தைப் போதிப்பவர்கள்

(இ) ஆட்சியாளர்கள்

(ஈ) இறைவாக்கினர்கள்

இவர்கள் நான்கு பேரும், ஆண்டவரின் இதயத்திற்கேற்ற நிலையில் இல்லை.

ஆகையால், அவர், தன்னுடைய இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை மக்களுக்குக் கொடுப்பதாக வாக்களிக்கின்றார்.

மேற்காணும் நான்கு பேரும் ஆண்டவரால் ஏற்படுத்தப்பட்டவர்கள்தாம். ஆனால், அவர்கள் தங்கள் இதயத்தின்படி நடக்கத் தொடங்குகிறார்கள். தாங்கள் நடப்பது மட்டுமன்றி, மக்களையும் அப்படியே வழிநடத்துகிறார்கள். தலைமைத்துவத்தில் இருப்பவர்களின் பொறுப்புணர்வு இரட்டிப்பாக இருக்கின்றது.

ஒவ்வொரு நிலையிலும், என் வாழ்வு, இறைவனின் இதயத்திற்கேற்றதாக இருக்கிறதா? என்று கேட்பதே நலம்.


2 comments:

  1. தலைமைத்துவத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி ,தங்கள் இதயத்தின் சொல்படி நடக்கும் அனைவருமே யாரோ ஒருவரின் “ இதயத்திற்கேற்ற மேய்ப்பர்” தான்! ஆகவே ஒவ்வொரு நிலையிலும் என் வாழ்வு இறைவனின் இதயத்திற்கேற்ப இருக்கிறதா? என்பதை என் இதயத்திடம் நான் கேட்பதே சால்பு.
    பல சமயங்களில் இதயத்தை,மனசாட்சியைத் தூண்டக்கூடிய கேள்விகளை முன் வைக்கும் மேய்ப்பருக்கு என் நன்றிகளும்! வாழ்த்துக்களும்!

    ReplyDelete