Thursday, December 26, 2013

உங்களையே கொழுக்க வைப்பதேன்?

அப்போது இறையடியார் ஒருவர் ஏலியிடம் வந்து கூறியது: 'ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 'எகிப்து நாட்டில் பார்வோன் வீட்டாருக்கு உன் மூதாதை வீட்டார் அடிமைகளாக இருந்தபோது அவர்களுக்கு நான் என்னையே வெளிப்படுத்தினேன். நான் உன் வீட்டாரை என் குருக்களாக ஏற்படுத்தினேன். பின் நானே கட்டளையிட்ட பலிகளையும், படையல்களையும் துச்சமாய் மதிப்பது ஏன்? உன் புதல்வர்களை எனக்கு மேலாக உயர்த்தி, என் மக்கள் இஸ்ரயேல் செலுத்தும் ஒவ்வொரு படையலிலும் சிறந்தவற்றை எடுத்துக்கொண்டு உங்களையே கொழுக்க வைப்பதேன்?'' (1 சாமுவேல் 2:27-30)

ஏலியும் அவரது புதல்வர்கள் ஒப்னியும், பினகாசும் சீலோவில் உள்ள இறைவனின் இல்லத்தின் குருக்களாகத் திகழ்கின்றனர். ஏலி இறைவனின் மேல் பயம் உள்ளவர்களாக இருக்கின்றார். ஆனால் அவரது புதல்வர்கள் 'கோயில் பூனை சாமிக்குப் பயப்படாது' என்பது போல இறைவனின் மேல் பற்றற்றவர்களாக இருந்து கொண்டு இறையாலயத்திற்கு வரும் காணிக்கைப் பொருள்கள் மேல் பற்றுக்கொள்ளத் தொடங்குகின்றனர். இது இறைவனின் பார்வையில் தவறெனப் படுகின்றது. அவர்களின் பாவத்தைச் சுட்டிக்காட்ட இறையடியார் ஒருவரை இறைவன் அனுப்புகின்றார்.

பாவம் என்றால் என்ன? 'முதன்மைப்படுத்துவதில் ஏற்படும் குழப்பமே பாவம்'. ஏலியின் புதல்வர்கள் இறைவனை முதன்மைப்படுத்துவதற்குப் பதிலாக தங்களின் வயிற்றை முதன்மைப்படுத்துகின்றனர்.

'முதன்மையானதை முதன்மையானதாக வையுங்கள்' என்பது மேலாண்மையியல் பாடம்.

இன்று நம் வாழ்வில் முதன்மையானவை முதன்மையானவைகளாக இருக்கின்றனவா?

'உங்களையே கொழுக்க வைப்பதேன்?'

No comments:

Post a Comment