Saturday, December 21, 2013

புதுவாழ்வுனக்கு அன்னவன் தருவான்

'ஆண்டவர் திருப்பெயர் போற்றி! போற்றி!
உன்னைக் காக்கும் பொறுப்பினை உடையான்
ஒருவனை அவர்தாம் அருளியுள்ளார்
இஸ்ரயேலில் அவனது பெயரும் புகழுடன்
ஓங்கித் திகழுவதாக!
புதுவாழ்வுனக்கு அன்னவன் தருவான்.
முதுமையில் உனக்கு அன்னமும் அளிப்பான்.'
(ரூத்து 4:14-15)

போவாசு ரூத்து திருமணம் இனிதே நடைபெற்று விட்டது. ரூத்து கருத்தரித்து ஓர் ஆண்மகவையும் பெற்று விட்டார். இந்த இனிய நிகழ்வைக் கொண்டாடும் ஊரார் நகோமியை வாழ்த்துகின்றனர். உரைநடைப் பகுதியைவிட பாடல் பகுதிகளின் மொழிபெயர்ப்பு தமிழில் மிக அழகாகவே உள்ளது.

புதிதாய் வந்திருக்கும் புது உறவு நகோமிக்கு புது வாழ்வு தருவான் எனவும், முதுமையில் அன்னம் தருவான் எனவும் வாழ்த்துகின்றனர். வாழ்வில் நமக்குத் தேவை இதுதான்: அன்றாடம் புதுவாழ்வும், அன்னமும்.

இதை நமக்கு உறுதி செய்யும் நம் உறவுகளுக்கு நன்றி கூறுவோம். நம் உறவுகளுக்கு இதை உறுதி செய்வோம்.

2 comments:

  1. Anonymous12/21/2013

    Cute Message....

    ReplyDelete
  2. Anonymous12/21/2013

    ஒவ்வொரு நாள் அதிகாலையும் நமக்குப் புது வாழ்வுதான் இன்முகத்தோடு ஒரு வாய் தண்ணீர் தருபவர்கள் கூட நம் உறவுகள் தான்.நம் வயிறைமட்டுமல்ல நம் உள்ளத்தை நிரப்பும் உறவுகளையும் போற்றுவோம்....நன்றி கூறுவோம்.

    ReplyDelete