Tuesday, February 10, 2015

படைப்பு வரலாறு

இன்றும் நாளையும் திருப்பலியில் நாம் வாசிக்கும் முதல் வாசகங்கள் தொடக்கநூல் முதல் பிரிவில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்த வாசகத்தை நாம் பாஸ்காத் திருவிழிப்பு திருப்பலியிலும் முதல் வாசகமாக வாசிக்கின்றோம்.

தொநூ 1ல் உள்ளதுபோலத்தான் உலகம் படைக்கப்பட்டதா? இல்லை!

அல்லது 'பெரிய வெடிப்பு' என்று சொல்லப்படும் பிங் பேங் கோட்பாடு சொல்வது போல படைக்கப்பட்டதா?

பைபளின் கதையின் நோக்கம் உலகம் எப்படிப் படைக்கப்பட்டது என்று சொல்வதற்கு அல்ல. எதற்காகப் படைக்கப்பட்டது என்று சொல்வதற்காகத் தான்.

மேலும், பைபிளில் படைப்பு வரலாறு இரண்டு முறை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டிற்குமே நிறைய வித்தியாசங்களும் இருக்கின்றன.

இன்று ஒரு சில டிவி சேனல்களைத் திருப்பி ஒரு சில போதகர்களின் விவிலியப் போதனையைக் கேட்டால் கோபமாகத் தான் வருகிறது. பைபிளை அவர்கள் இஷ்டத்திற்கு அர்த்தம் கொடுக்கப் பயன்படுத்துகின்றனர். அர்த்தம் கொடுத்தால் பரவாயில்லை. அதை வைத்து மக்களைப் பயமுறுத்தவும், தேவையில்லாத 'பாவம்' என்ற சிந்தனையை உருவாக்குவதிலும் குறியாக இருக்கின்றனர். பயமுறுத்தும், பாவத்தை முன்னிறுத்தும் யாரும் கடவுளாக என்ன மனிதனாகக் கூட இருக்கத் தகுதியில்லை என்றே நான் சொல்வேன்.

படைப்பு வரலாறு குறித்து இன்னும் நாளை பார்ப்போம்.

3 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள்! 'அன்பே கடவுள்' என்றால், அவர்தான் நம் 'தந்தை' என்றால் எங்கிருந்து உள்ளே நுழையமுடியும் இந்த பயமும்,பாவமும்? யார் வேண்டுமானாலும் கடவுளைக் கையாளலாம் என்றான பிறகு அவரவருக்குத் தெரிந்ததை அவரவர் பாணியில், அவரவர் வசதிக்கேற்ப எடுத்துரைக்கிறார்கள்.இதில் அவர்களைப் பார்த்து கோப்ப்பட என்ன இருக்கிறது? சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரமுடியும்?' படைப்பு வரலாறு' குறித்துக் கேட்க ஆவலாயுள்ளோம்.ஆரம்பியுங்கள் விரைவில்.....நன்றி!

    ReplyDelete
  2. Anonymous2/10/2015

    Good morning Yesu. We have studied in Sunday catechism. Why did god create the world? To know Him and to love Him. Please write more on first 11 chapters. Have a good day

    ReplyDelete
  3. Thanks IAS for the inspiration. I will write on Gen 1-11. Good day. Today I finished my exams.

    ReplyDelete