Tuesday, February 24, 2015

போகிற போக்கில்...

'ஏய்...தம்பி...உன்னைத்தான்...அப்படிப் போகிற போக்கில் அந்த கேட்டைச் சாத்திவிட்டுப் போயேன்!'

'மெடிக்கல்ஸ்கா போறீங்க...அப்படியே ஒரு பேராசெட்டமாலும் வாங்கிட்டு வந்திடுங்க!'

'வெளியில போனா, அப்படியே என் மொபைலுக்கு டாப்-அப் பண்ணிடுங்களேன்!'

'பேங்குக்குப் போனா அப்படியே இந்த பாஸ்புக்லயும் என்ட்ரி போட்றுங்களேன்!'

'யுனிவர்சிட்டி போனா அப்படியே நோட்டிஸ் போர்டுல ரிசல்ட் போட்றுக்காங்களான்னு பார்த்துட்டு வந்துடுங்களேன்!'

'பெட்ரேலா...இப்பவா, அப்பறம் அங்கிட்டுப் போகும்போது போட்டுக்கலாம்டா!'

இப்படி நிறையப் பேர் நம்மிடம் சொல்லியிருப்பார்கள். அல்லது நாம் மற்றவர்களிடம் சொல்லியிருப்போம். அல்லது யாராவது பேசிக்கொண்டிருக்கக் கேட்டிருப்போம்.

'போகிற போக்கில்' என்பது நாம் அரைக்கிலோ தக்காளி வாங்கிட்டு கடைக்காரரிடம் கேட்கும் கறிவேப்பிலை கொசுறு போன்றது. தக்காளிக்கு மட்டும்தான் காசு கொடுக்கிறோம். ஆனால் கூடவே கறிவேப்பிலையும் கிடைத்து விடுகிறது.

'போகிற போக்கில்' என்ற செயலில் ஒரு நிறுத்தம் இருக்கின்றது.

அதாவது, நான் 6 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கும் செல்ல வேண்டும் என வைத்துக்கொள்வோம். 5:30 மணிக்கு வீட்டிலிருந்து புறப்படுகிறேன். என் பயணம் கோவிலை நோக்கியதாக இருந்தாலும் 'போகிற போக்கில்' எனக்குக் கொடுக்கப்பட்ட 'ரீசார்ஜ்' வேலைக்காக 'சத்யா மொபைல்ஸ்ல்' நான் 5:50க்கு நுழைகிறேன். ஆக. என் முப்பது நிமிடப் பயணமானது, 20-10 என இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிடுகிறது. இப்படிப் பிரிக்கப்பட்டதால் ஒருவேளை கோவிலுக்கு நான் 6:05க்குத் தான் செல்ல முடியும். அல்லது என் பைக்கின் வேகத்தைக் கூட்டித் தாமதத்தை ஈடு செய்ய வேண்டும். ஆக, தாமதம் அல்லது வேகம் என்ற இரண்டு காரணிகளின் மூலமாக நாம் செய்கிற இந்த வேலைக்கு ஈடு கட்ட வேண்டும்.

பைக் பார்க்கிங் செய்ய கடைமுன் இடமில்லாமல், எங்கோயோ நிறுத்திவிட்ட நடந்து வந்து, ரீசார்ஜ் கடையின் கூட்டத்தையும் சமாளித்து, 'போகிற போக்கில்' ரீசார்ஜ்ம் செய்து, சரியாக 6 மணிக்கு நான் கோவிலை அடைந்துவிட்டேன் என்றால் என்னால் 30 நிமிடங்களுக்குள் நான்கு வேலைகளைச் செய்துவிட முடிகிறது: 'கோவிலுக்குப் பயணம், பார்க்கிங், கூட்டம் சமாளிப்பு, ரீசாஜ்'. ஆக, நமக்குச் செயல்திறன் அதிகம் இருந்தாலும் அதை நாம் பயன்படுத்துவதில்லை என்று நம்மையே ஆராய்ந்து பார்க்கவும் இந்த 'போகிற போக்கில்' காரியம் உதவுகிறது.

மேலும், 'போகிற போக்கில்' இதைச் செய் என்று சொல்லப்படும் வேலைகளுக்கு நாம் கணக்குக் கொடுக்கத் தேவையில்லை. எளிதாக சாக்குப் போக்கு சொல்லிடலாம். 'என்னடா டாப்-அப் பண்ணச் சொன்னேன்ல!' என்ற என்கொயரிக்கு எளிதாக, 'கடை பூட்டியிருந்துச்சுமா!' என்று சொல்லி விடலாம். இதற்காக நமக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை.

ஆக, நம்ம வாழ்க்கையில சில காரியங்களை போகிற போக்கில் செய்யலாம். அல்லது போகிற போக்கில் செய்வது போல செய்யலாம் - அதாவது, அக்கறை இல்லாமல், சாக்குப் போக்கு சொல்லி!'

சரி! ஏன் இப்படிப் போகிற போக்கில் சொல்லிக்கிட்டே போறீங்க அப்படின்னு கேட்கறீங்களா?

நாளைய முதல் வாசகத்தின் நாயகர் இறைவாக்கினர் 'யோனா'. 'யோனா' என்றால் புறாக்குஞ்சு அல்லது புறா என்று அர்த்தம்.

வழக்கமா கடவுள் கூப்பிட்டா விழுந்தடிச்சு ஓடி வர்ற சாமுவேல், எலியா, எலிசா, நாத்தான், எசாயா, எரேமியா இறைவாக்கினர்களைத் தான் நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால், இவர் ஒரு வித்தியாசமான இறைவாக்கினர். கடவுளுக்கே டேக்கா கொடுக்குற இறைவாக்கினர். கடவுளின் அழைப்பை கண்டுகொள்ளாத ஒருவர். இதுல என்ன சிறப்புனா, கடவுள் இதுக்காக அவரைத் தண்டிப்பதும் கிடையாது. கடவுளும், யோனாவும் ஒருவருக்கொருவர் கண்ணாமூச்சிதான் விளையாடிக் கொள்கின்றனர். அதமாதரி, கடல்ல புயல் வந்து, அதுக்குக் காரணம் தான் எனத் தெரிந்தாலும், துணிந்து, 'என்னைத் தூக்கிக் கடல்ல பேடுங்க! எல்லாம் சரியாயிடும்!' என்று நெஞ்சை நிமிர்த்தியவர் - அந்த நேரம் அவர் என்ன நினைச்சிருப்பார் - 'பார்த்திப்போம்! நானா! கடவுளான்னு! சும்மா தூக்கிப் போடுங்கடா!' அல்லது 'இவர் குடுக்குற வேலையை செய்றதுக்குக் கடல்ல குதிச்சி சாகலாம்!' னு கூட நினைச்சிருப்பார்.

அப்படி தூக்கியெறியப்பட்டு மீன் ஒன்றின் வயிற்றில் மூன்று பகலும், மூன்று இரவும் இருந்து கரையொதுங்கிய நம்ம யோனா நினிவேயில் மனமாறுங்கள் என்ற செய்தியை அறிவிக்கும் படலம்தான் நாளைய முதல் வாசகம்.

'யோனா' என்பவர் ஒரு வரலாற்று நபர் அல்ல என்பதும், அவர் ஒரு இலக்கிய உருவகம் என்பதும் இன்று பல ஆய்வாளர்களின் கருத்து.

யோனா என்ன செய்றார் பாத்தீங்களா?

மூன்று நாள் நடந்தால் தான் ஒரு எல்லையிலிருந்து அடுத்த எல்லைக்குச் செல்ல முடியும் என்கிற தூரத்தை ஒரே நாளில் நடந்து கடக்கின்றார். அப்படின்னா, ரொம்ப வேகமா நடந்திருப்பார். அல்லது ஓடியிருப்பார். இப்படியான ஓட்டத்தில் 'மனம்மாறுங்கள்!' அப்படின்னு சொல்லிட்டுப் போயிடுறார். என் கடமை முடிஞ்சுடுச்சுனு நினைக்கிறார். ஆனா, நினிவே மக்களைப் பாருங்களேன். ரொம்ப புத்திசாலிகள். சொன்னது யாரென்று பார்க்கல! சொன்னது எப்படியென்று பார்க்கல! ஆனா, யோனா சொன்னத அப்படியே கடவுளின் வார்த்தையா எடுத்து - அரசன் முதல் ஆடுமாடுகள் வரை சாப்பிடாமல் நோன்பிருந்து மனம் மாற்றத்தைக் காட்டுகிறார்கள்.

ஆக, போற போக்குல நாம செய்ற ஒரு காரியம் கூட கடவுளிடம் இருந்து வருகிறதென்றால் அது மிகப்பெரிய பயனைத் தர முடியும்.

ஆக, இன்னைக்கு நாம விரும்பிச் செய்ற எதுன்னாலும், போற போக்குல செய்ய எதுன்னாலும் அதுவும் பலன்கொடுக்கும் என்று நினைத்துச் செய்யலாமே!


4 comments:

  1. ஆசிரியர் தொழிலில் ' simple to complex' என்று ஒரு சொற்றொடர் உண்டு.தெரிந்த விஷயங்களை வைத்து ்தெரியாத்தைப் புரியவைப்பது தான் அது.'யோனா தீர்க்கத்தரிசி' நினிவே பட்டணத்தையும்,அதன் மக்களையும் அழிவிலிருந்து காப்பாற்றிய பெரிய்ய்ய விஷயத்தை இத்தனை இலாவகமாக 'போகிற போக்கில் சொல்லக்கூடிய, செய்யக்கூடிய திறமை தங்களுக்கு மட்டுமே சொந்தமானது Father! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. Migavum Arumayaga Irukkirathu

    ReplyDelete
  3. Anonymous2/26/2015

    I too love the person of prophet Joana in whom I find myself. Both obeying and not obeying God's will. Finally God's mercy wins always

    ReplyDelete
  4. Anonymous2/26/2015

    I too love the person of prophet Joana in whom I find myself. Both obeying and not obeying God's will. Finally God's mercy wins always

    ReplyDelete