Wednesday, February 11, 2015

மரக்காலின் கீழ் வைக்காதீங்க!

எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை.
மாறாக, விளக்குத் தண்டின் மீதே வைப்பர்.
அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.
இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க!
அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு
உங்கள் விண்ணகத் தந்தையை போற்றிப் புகழ்வார்கள்.
(மத்தேயு 5:15-16)

மர்லின் மன்றோ அவர்களின் வாழ்க்கை வரலாறைப் படித்துக் கொண்டிருந்தேன்.

1962களில் அமெரிக்காவின் கனவுக்கன்னி என்று பலரின் தூக்கத்தைக் கலைத்த மர்லின் மன்றோவின் வாழ்க்கை தொடங்கியது என்னவோ தோல்வியில் தான்.

ஒரு பாரில் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த ஒரு பெண் சினிமா, ஆல்பம் என்று கலக்கிக் கொண்டிருந்தாலும், பணம் மற்றும் புகழுடன் இலவச இணைப்பாக அவருக்கு சோகமும் வந்து கொண்டே இருந்தது. அவர் செய்தது கொலையா? அல்லது தற்கொலையா? என்றும் கூட தெரியவில்லை.

சரிப்பா! மர்லின் மன்றோவுக்கும் விளக்குக்கும் என்ன சம்பந்தம்?

ராத்திரிக்கும் விளக்குத் திரிக்கும் என்ன சம்பந்தம்? அப்படின்னு கேட்குறீங்களா?

சம்பந்தம் இருக்கு.

இன்று காலையுடன் பருவத்தேர்வுகள் முடிந்தன. இந்தத் தேர்வுக்கு ஒரு பகுதியாக இருந்தது தான் மேற்காணும் இறைவாக்குகள். நாம் அடிக்கடி கேட்ட இறைவாக்குகள் தாம்.

அவற்றில் நாம் இன்று சிந்திக்கவிருப்பது இரண்டே வார்த்தைகள் தாம்: மரக்கால் மற்றும் விளக்குத்தண்டு.

இரண்டையும் தொடர்புபடுத்தக் கூடிய வார்த்தை விளக்கு. விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைக்கக் கூடாது. ஆனால் விளக்குத்தண்டின் மேல் வைக்க வேண்டும்.

விளக்குத்தண்டு என்பது யூத மரபில் ஒரு குச்சி. அந்தக் குச்சியின் மேல் விளக்கை (அகல் விளக்கு - வழக்கமாக ஒலிவ எண்ணெயில் எரியும் விளக்கு) ஏற்றி வைப்பார்கள். மரக்கால் நம்ம ஊர்ல அந்தக் காலத்துல புழக்கத்தில் இருந்த நாளி, ஒழக்கு போன்ற ஒரு அளவை. ஏறக்குறைய 8.75 லிட்டர் அளக்கக் கூடிய ஒரு அளவை. அந்த அளவையைக் கவுத்திப் போட்டு அதுக்குள்ள விளக்கு வைக்க முடியுமா என்பதுதான் கேள்வி.

இயேசுவின் கூற்றுப்படி பார்த்தால் இரண்டு விஷயங்கள்:

அ. எது எது எந்த எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அது அது அந்த அந்த இடத்தில் இருக்க வேண்டும்.

ஆ. எது எது எந்த எந்த வேலையைச் செய்ய வேண்டுமோ அது அது அந்த அந்த வேலையைச் செய்ய வேண்டும்.

இப்ப பிரச்சினை என்னன்னா மெட்டீரியல் ரியாலிட்டி அப்படிங்கிற வகையில இதை நாம ஏத்துக்கலாம். சரியா செஞ்சிடலாம்.

ஆனா, இதை வாழ்க்கைனு வரும்போது எப்படி பொருத்திப் பார்ப்பது?

மர்லின் மன்றோ தான் விளக்குத்தண்டு என்று நினைத்த ஒன்று அவருக்கே மரக்காலாய் மாறிவிட்டதோ.

அண்மையில் வயதான அருட்தந்தை ஒருவருக்கு மருத்;துவமனையில் நோயிற்பூசுதல் அருளடையாளம் கொடுக்கச் சென்றிருந்தேன். அவர் ரோமில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். சொந்த ஊர் பெல்ஜியம் நாட்டிலுள்ள ஒரு ஊர். அவர் அருட்பணியாளரான போது முதல் பணியாக அனுப்பப்பட்டது தென் அமெரிக்காவிலுள்ள பெரு என்ற நாட்டிற்கு. அங்கு போய் மொழி கற்று அவர்களோடு தன்னையே ஒன்றித்து பணி செய்து கொண்டிருந்தபோது திருச்சபைச் சட்டம் படிக்கச் செல்லுமாறு ரோமிற்கு அனுப்பப்படுகிறார். ரோமிற்கு அன்று வந்தவர் தான் இன்று வரை இருக்கிறார். ஆனால், பேச்சுக்குப் பேச்சு பெரு நாட்டைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். 'நான் பெருவிலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது!' என்று முடிவாகச் சொன்னார். ஏறக்குறைய முப்பது வருடங்கள் கல்விப்பணி செய்ததும், அருட்பணியாளர்களுக்கும். குருமாணவர்களுக்கும், அருட்செல்வியர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்ததும், பல்வேறு கூட்டங்களில் பேசுவதற்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றதும் தனக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று சொன்னாலும் அவைகளை தான் மிகுந்த அர்ப்பணத்தோடு செய்ததாகவே சொன்னார்.

தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தபோது இந்த அருட்பணியாளர் நினைவு தான் அதிகம் வந்தது. ஏனெனில் நேற்று இரவு அவர் இறந்து விட்டார்.

நம்ம வாழ்க்கையில நாம விளக்குத்தண்டு அப்படின்னு நினைக்கிறதே ஒருவேளை மரக்காலா ஆயிடுச்சுன்னா நம்ம வாழ்க்கை எப்படி ஆயிடும்?

நம்ம வாழ்க்கையில இதுதான் விளக்குத்தண்டு அல்லது இதுதான் மரக்கால் என்று நாம் எதை வைத்து முடிவெடுப்பது? பணம் சம்பாதிப்பதை வைத்தா, பட்டம் பெறுவதை வைத்தா, நிறைய உறவுகளைச் சம்பாதிப்பதை வைத்தா?

மரக்காலின் கீழ் வைக்காதீங்க! விளக்குத்தண்டின் மேல் வைங்க! என்று சொன்ன இயேசு இவைகளை எப்படித் தீர்மானிப்பது என்பதைச் சொல்லவில்லையே?

நம்ம மர்லினுக்கும், இந்த அருட்பணியாளருக்கும் வாழ்க்கை இன்னும் ஒரு முறை வாழக் கிடைத்தால் எங்கே தங்கள் விளக்குகளை ஏற்றுவார்கள்?


5 comments:

  1. அழகாக ஆரம்பித்துக் கடைசியில் குழப்பி விட்டுட்டிங்களே ஃபாதர்! யாரும் செய்யாத ஒரு செயலை...அதைச் செய்தால் எப்படி இருக்கும் எனக்கூற வருகிறார் இயேசு.நாலு பேருக்கு நல்லது செய்ததாக அமைய வேண்டும் நம் வாழ்க்கை; அப்பொழுது அதற்குண்டான மகிழ்ச்சியும், வாழ்ந்த திருப்தியும் நம்மை வந்தடையும்.இதுதான் செய்தி இல்லையா? அருட்பணியாளர்பற்றிக் கூறியது கூடப் புரிகிறது...ஆனால் இந்த மர்லின் மன்றோ...ஒன்றும் விளங்க வில்லை.விளங்கியதெல்லாம் தம் வாழ்க்கையும் கூட நாலுபேருக்கு நல்லது செய்வதாக அமைய வேண்டும்.நல்ல செய்திக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. Yes ma. When I read it for the second time I had my own confusions. I am as confused as Merlin Mandro and that Priest-on-bed were!

      Delete
  2. Anonymous2/11/2015

    Yesu good morning. Merlin Mandro as I have read somewhere that she wrote a letter and consumed tablets and ended her life at the age of 32. She writes' I forgot God and was insensitive to the needs of the people around me. And so I am left alone though there are people around me. I'm sorry'. With her name and fame and besides her wealth she would have lit the lives of others. Maybe the Lord helped her understand the meaning of life. 6th day Novena today. Pray for your ministry. Happy Feast of Our Lady of Loudes

    ReplyDelete
    Replies
    1. Your sharing on Mandro has complemented my reading IAS. Thanks a lot. Thanks for your prayers and blessings. Let us continue to support each other. Love.

      Delete
  3. My appreciation to you.Also quote on next time about our lady of Lourdu.

    ReplyDelete