Friday, June 29, 2018

செல்க என்றால் செல்கிறார்!

நாளைய (30 ஜூன் 2018) நற்செய்தி (மத் 8:5-17)

செல்க என்றால் செல்கிறார்!

நூற்றுவர் தலைவர் ஒருவரின் 'பையன்' ('பணியாளன்' அல்லது 'மகன்') நலம்பெறும் நிகழ்வை நாளைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். 'நான் வந்து குணமாக்குவேன்' என்று இயேசு அவரோடு செல்ல முன்வருகிறார். ஆனால் அவரோ, 'ஒரு வார்த்தை சொல்லும் என் மகன் நலமடைவான்' என்கிறார்.

அத்தோடு நில்லாமல், வார்த்தையின் வலிமை பற்றி அறிந்துள்ளார் இந்த தலைவர். எப்படி?

தன் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களை நோக்கி, 'வா' என்றால் 'வருகிறார்,' 'செல்' என்றால் 'செல்கிறார்,' 'இதைச் செய்' என்றால் 'செய்கிறார்.'

அதிகாரத்தில் வார்த்தை அப்படியே செயலாக மாறிவிடுகிறது.

இதைச் சொல்வதன்வழியாக நூற்றுவர் தலைவன் இயேசுவுக்கு அனைத்தின்மேலும் அதிகாரம் உள்ளது என்பதை நம்புகிறார். இந்த நம்பிக்கையை இயேசு பாராட்டுகின்றார்.

'நீர் போகலாம். நீர் நம்பியவண்ணமே நிகழும்' என அனுப்பிவைக்கின்றார் இயேசு.

நம்பிக்கையும், வார்த்தையம் இணைந்தால் நலம்பெறுதல் சாத்தியமாகிறது.

1 comment:

  1. சாதாரணமாக " அதிகாரம்" உள்ளவர்கள் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் அடுத்தவரின் அதிகாரத்தை கண்டுகொள்வதுமில்லை; அடிபணிவதுமில்லை.ஆனால் இன்றையப் பதிவின் கதாநாகன் அதற்கு ஒரு விதிவிலக்கு.ஆகவே தான் நூற்றுவர் தலைவன் இயேசுவின் அதிகாரத்தைக் கண்டுகொள்வதை, அவருக்கு எதிராளி மீதுள்ள நம்பிக்கையை இயேசுவால் பாராட்ட முடிகிறது. என் நம்பிக்கை யாரிடம் உள்ளது? எந்த நிலையில் உள்ளது? நலம் வேண்டி நிற்கும் அனைவருக்கும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் இந்த நூற்றுவர் தலைவன். "நம்பிக்கையும்,வார்த்தையும் இணைந்தால் நலம் பெறுதல் சாத்தியம்,." நான் நலம் பெற என் நம்பிக்கை "அவரின்" வார்த்தையோடு இணையட்டும். மனத்தில் நம்பிக்கை விதைகளைத் தூவிய தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete