Monday, June 25, 2018

நாய்களுக்கு, பன்றிகளுக்கு

நாளைய (26 ஜூன் 2018) நற்செய்தி (மத் 7:6,12-14)

நாய்களுக்கு, பன்றிகளுக்கு

நாளைய நற்செய்தியை மேலோட்டாமாக வாசித்தால் நாய்களுக்கும், பன்றிகளுக்கும் எந்த வகையான உணவுகளை வைக்கக்கூடாது? என்று இயேசு சொல்வதுபோல அமைந்துள்ளது.

'தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம்.
அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும்.'

'உங்கள் முத்துக்களைப் பன்றியின்முன் எறிய வேண்டாம்.
எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்.'

இரண்டும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன. அதாவது, எதை யாருக்குக் கொடுக்க வேண்டுமோ அதை மட்டுமே அவருக்குக் கொடுக்க வேண்டும். அல்லது ஒன்றின் மதிப்பை அறியாதவர்களுக்கு அதை நாம் கொடுக்கக் கூடாது. நாய்க்கு எலும்பும், பன்றிக்குக் கழிவும்.

நாய்களும், பன்றிகளும் தங்கள் செயலுக்குப் பொறுப்பானவை அல்ல. ஏனெனில் அவைகளால் இவற்றை மட்டும்தான் செய்ய முடியும்.

தூய்மையானது அசுத்தப்படுவதற்கும், முத்துக்கள் மிதிக்கப்படுவதற்கும் இவற்றைக் கொடுப்பவர்தான் பொறுப்பு.


2 comments:

  1. Super reflection Yesu

    ReplyDelete
  2. " தூய்மையானது அசுத்தப்படுவதற்கும்,முத்துக்கள் மிதிக்கப்படுவதற்கும் இவற்றைக்கொடுப்பவர் தான் பொறுப்பு." மிருகங்கள் சம்பந்தப்பட்ட வகையில் வேண்டுமானால் இந்த வரிகள் ஒத்துக்கொள்ளக்கூடியவையாக இருக்கலாம்..ஆனால் மனிதர்களைப் பொறுத்த வரையில்?? நாருக்கு மணமில்லை என்பதால் பூக்கட்ட அதை பயன்படுத்தாமலா இருக்கிறோம்.அதைப்போன்றே தான் மனிதர்களும். ஒரு பொருளின் மதிப்பு உயர்வது கொடுப்பவரின் தாராளத்தினால் மட்டுமல்ல....அதற்குப்பெற்றுக்கொள்பவரின் பெருந்தன்மையும் காரணம்." எதை யாருக்கும் கொடுக்க வேண்டுமோ அதை மட்டுமே கொடுக்க வேண்டும்"...இதை யாருக்காகச் சொன்னாலும் அவர்களைப் புண்படுத்துகிற பழமொழி. தந்தை ஒத்துக்கொள்வார் என்றே நம்புகிறேன்....

    ReplyDelete