Wednesday, October 26, 2016

போராட்டம்

வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் என்று பல நேரங்களில் நாம் கேட்டிருக்கிறோம்.

இன்னும் ஒரு படி போய் வாழும் வரை 'நீ ஒரு போராளி' என நாளைய முதல் வாசகத்தில் (எபே 6:10-20) சொல்கிறார் பவுல்.

இந்தப் போராளியின் படைக்கலன்களைப் பட்டியலிடுகின்றார் பவுல்:

அ. உண்மை - இடைக்கச்சை

ஆ. நீதி - மார்புக் கவசம்

இ. நற்செய்தி அறிவிக்கும் ஆயத்த நிலை - மிதியடி

ஈ. நம்பிக்கை - கேடயம்

உ. மீட்பு - தலைச்சீரா (ஹெல்மெட்)

ஊ. கடவுளின் வார்த்தை - போர்வாள்

நின்று கொண்டிருக்கும் ஒரு மனிதனின் தலை, கைகள், இடுப்பு, கால்கள் எவற்றைத் தாங்கி இருக்க வேண்டும் என்று சொல்கிறது இந்தப் பட்டியல்.

இவை இருந்தால் நாம் நமக்கு மேலிருக்கும் ஆட்சியாளர்கள், அதிகாரம் செலுத்துவோரிடமும் போரிடலாம் என்கிறார் பவுல்.

ஆனால், நம் அரசு அலுவலகங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும், காவல் நிலையங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் சென்று பாருங்கள்.

இவற்றின் ஒன்றால்கூட நமக்கு பயன் இல்லையோ என்று தோன்றுகிறது.

வாழ்வின் எதார்த்தங்களும், இறைவார்த்தைகளும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாதது போல இருக்கின்றன.

இருந்தாலும், இப்படைக்கலன்கள்தாம் வாழ்க்கை என்ற வண்டியை ஒரு அடி முன்னால் எடுத்துச் செல்கின்றன.

5 comments:

  1. இன்றையக் கால கட்டத்திற்குப் பொருத்தமானதொரு பதிவு.படகோட்டி ஒருவன் தன் துடுப்பை வலிக்கையில் காற்றும் அதே திசையில் வீசி அவனுக்குக் கைகொடுத்தால் அதனால் அவனுக்கென்ன இலாபம்? காற்றுக்கெதிராக அவன் படகை செலுத்தும்போது மட்டுமே தான் ஏதோ சாதித்ததாக நம்புகிறான்; பெருமைப்படுகிறான்..அப்படித்தான் நம் வாழ்க்கையும்.வாழ்வின் எதார்த்தங்களும்,இறைவார்த்தைகளும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாத நேரங்களில் மட்டுமே நம் ' நம்பிக்கை' எனும் துடுப்பை அதன் உச்சகட்டத்தில் உபயோகிக்க முடிகிறது.நம் அரசு அலுவலகங்களிலும்,நீதிமன்றங்களிலும்,காவல் நிலையங்களிலும்,மருத்துவமனைகளிலும் நம் இறை வார்த்தைகள் உடனுக்குடன் அதன் பலனைத் தராமல் போகலாம்.ஆனால் இந்தப் பதிவில் பட்டியலிடப்பட்டுள்ள உண்மை,நீதி,நம்பிக்கை,இறைவனின் வார்த்தை எனும் படைக்கலன்களை அணிந்துகொண்டு பரிசுத்த ஆவியின் உதவியோடு இறைவனிடம் மன்றாடினால் கைமேல் பலன் கிடைக்காமல் போயிடினும் நாம் பொறுத்திருப்பற்கான புண்ணியத்தின் பலனை காலம் கடந்தும்கூட கண்டிப்பாகப் பெறுவோம்.தேவையெல்லாம் கொஞ்சம் அதீத பொறுமை மட்டுமே. "கையில காசு; வாயில தோசை" என்று எதிர்பார்க்க இது வியாபாரமல்ல; வாழ்க்கை.இந்த வாழ்க்கை எனும் வண்டியை ஒரு அடி முன்னால் எடுத்துச் செல்ல உதவும் இப்படைக்கலன்களை நாமும் அணிந்துகொள்ள முயற்சிப்போம்.இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களைப் பட்டியலிட்டுத்தந்திருக்கும் தந்தைக்கு என் நன்றிகள்! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. That moment when you realize the armor of God has got no pants!!! :-)))

    ReplyDelete
  3. Catherine's comment is so sexist!
    Allow me to detest it.
    What about not having chudithar, saree, skirt and the like?

    ReplyDelete
    Replies
    1. Oh no.. geetanjali ma'am... I saw a meme on that and it just came to my mind wen I read this article... didn't mean to be offensive...

      https://www.google.com/imgres?imgurl=https%3A%2F%2Fs-media-cache-ak0.pinimg.com%2F564x%2Fee%2F93%2F8b%2Fee938b4c2bf04e7e7af742b8b467bad8.jpg&imgrefurl=https%3A%2F%2Fwww.pinterest.com%2Fpin%2F351140102170440394%2F&docid=g-n_avd0mzERxM&tbnid=a84C9ZrtgwJx1M%3A&w=564&h=776&bih=511&biw=384&ved=0ahUKEwiGv4yu_PrPAhUC6SYKHc5gAW8QMwgcKAEwAQ&iact=mrc&uact=8

      https://www.google.com/imgres?imgurl=https%3A%2F%2Fs-media-cache-ak0.pinimg.com%2F564x%2F00%2Fdf%2F2e%2F00df2e862f3a63433eef1247359cdd89.jpg&imgrefurl=https%3A%2F%2Fwww.pinterest.com%2Fpin%2F189995678007679529%2F&docid=HfGNvFur71wluM&tbnid=DMyrLHUR9L0nTM%3A&w=241&h=300&bih=511&biw=384&ved=0ahUKEwiGv4yu_PrPAhUC6SYKHc5gAW8QMwgbKAAwAA&iact=mrc&uact=8

      Delete
  4. Hi Catherine...
    I smiled!

    ReplyDelete