Thursday, October 13, 2016

தன்அறிமுகம்

நாளைய முதல் வாசகத்தில் (காண். எபேசியர் 1:1-10) தூய பவுல் தன்னை அறிமுகம் செய்து தன் உரையைத் தொடங்குகின்றார்.

'கடவுளின் திருவுளத்தால் திருத்தூதனாய் இருக்கும் பவுல் எழுதுவது'

மிக எளிமையான தன்அறிமுகம்.

தன் பழைய வாழ்க்கை பற்றியோ, தன் தற்போதைய வெற்றிகள் பற்றியோ எதுவும் எழுதாமல், தான் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டதையும், தன் பணியையும் மட்டும் முன்னிறுத்தி தன்னை அறிமுகம் செய்கின்றார்.

ஜான் மரிய வியான்னியை நினைவுபடுத்துகிறது இந்த இறைவாக்கு.

'நான் ஓர் அருள்பணியாளர் - அதுபோதும் எனக்கு' என தன்னையே அறிமுகம் செய்தார் அவ்வளவுதான்.

நாம் எப்படி மற்றவர்களுக்கு நம்மை அறிமுகம் செய்கிறோம் என்பது நாம் நம்மை எப்படி புரிந்துவைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது.

3 comments:

  1. " கடவுளின் திருவுளத்தால் திருத்தூதன்" எனத்தன்னை அறிமுகம் செய்யும் பவுலும்,
    "நான் ஒரு அருட்பணியாளர்-அது போதும் எனக்கு" என்று தன்னை அறிமுகம் செய்யும் புனித ஜான் மரிய வியான்னியும் தங்களின் எளிமைக்காக நம் மனத்தில் இடம்பிடிக்கிறார்கள் என்றால்," நாம் எப்படி மற்றவர்களுக்கு நம்மை அறிமுகம் செய்கிறோம் என்பது நாம் நம்மை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது" என்று கூறும் தந்தை "வாழ்வின் நிதர்சனம் இதுதான்".. என்ற தன் தெளிவான சிந்தனைக்காக இன்னும் ஒரு படி மேலே நிற்கிறார்.கண்டிப்பாக நம் இறுதி மூச்சு நம்மை விட்டுப் பிரியும் நேரம் நம்மைப் படைத்தவரின் முன்னால் நம்மை நிறுத்துவது நம் பிறப்பின் பின்புலமோ,நாம் வாங்கிய பட்டங்களோ,நாம் படைத்த சாதனைகளோ அல்ல; மாறாக அவருக்கும் நம்க்குமிடையே உள்ள உறவு மட்டுமே...... புரிய வைத்த தந்தைக்கு ஒரு சலாம்!!!






    ReplyDelete
  2. By the will of God... naan nirpathum... eluvathum...irupathum.. .iyanguvathum...avar tham thiruvulathaal...all things can be contained in his divine will...

    ReplyDelete
  3. By the will of God... naan nirpathum... eluvathum...irupathum.. .iyanguvathum...avar tham thiruvulathaal...all things can be contained in his divine will...

    ReplyDelete