Sunday, November 24, 2013

ஏன் ஆண்டவர் எம்மை இப்படிக் கைவிட்டுவிட்டார்?

ஆண்டவரின் தூதர் கிதியோனுக்குத் தோன்றி, 'வலிமை மிக்க வீரனே! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்' என்றார். கிதியோன் அவரிடம், 'என் தலைவரே! ஆண்டவர் எம்மோடு இருக்கிறார் என்றால் ஏன் இவையெல்லாம் எமக்கு நேரிடுகின்றன? ஆண்டவர் எம்மை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வரவில்லையா என்று கூறி, எங்கள் தந்தையர் எமக்கு வியத்துரைத்த அவரது வியத்தகு செயல்களெல்லாம் எங்கே? இப்பொழுது ஏன் ஆண்டவர் எம்மை இப்படிக் கைவிட்டுவிட்டார்?' என்றார். (நீதித் தலைவர்கள் 6:12-13)

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் மௌனத்தை அனுபவித்ததும் நீதித் தலைவர்கள் காலத்தில்தான். கடவுளின் மௌனம் கிதியோனுக்குப் பல கேள்விகளை எழுப்புகின்றது. கடவுளின் வார்த்தைகளை மட்டும் விவிலியம் பதிவு செய்யவில்லை. கடவுளின் மௌனத்தையும் அது பதிவு செய்திருக்கின்றது. வார்த்தை எந்த அளவிற்கு ஆற்றல் மிக்கதோ, அந்த அளவிற்கு மௌனமும் ஆற்றல் மிக்கது. ஆகையால் தான் நம் அன்பிற்குரியவர்களின் மௌனத்தை நம்மால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. 

கிதியோனின் வழியாக ஆண்டவர் தன் மௌனத்தைக் களைத்து விட்டுச் செயலாற்றத் தொடங்குகின்றார். நம் வாழ்விலும் கடவுள் மௌனமாக இருக்கிறாரே என்று கலங்கும் போதெல்லாம் கிதியோனை நினைத்துக் கொள்வோம். 'ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்!' என்ற வாழ்த்து நம் காதுகளையும் சீக்கிரம் எட்டும்.

No comments:

Post a Comment