Tuesday, July 13, 2021

தந்தையே

இன்றைய (14 ஜூலை 2021) நற்செய்தி (மத் 11:25-27)

தந்தையே

தன் வாழ்வின் இருத்தல், இயக்கம் என அனைத்தும் தன் தந்தையால்தான் என்று வாழும் இயேசு தன் வாழ்வின் வெற்றியையும் அதனால் வரும் நேர்முகமான உணர்வையும் நன்றியாக தன் தந்தையிடம் எழுப்புகின்றார்.

நேற்றைய நற்செய்தி வாசகத்தில், தன் செய்தி கேட்டு மனம் மாறாத நகரங்களைக் கடிந்துகொள்கின்றார் இயேசு. இன்றைய வாசகத்தில், தன் செய்தி தன் திருத்தூதர்கள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களுக்காக நன்றி கூறுகின்றார்.

நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் கடவுளின் கைகளிலிருந்து வருகின்றன என்பதை உணர்வதும், அந்த உணர்வில் வாழ்வதும் நம்பிக்கைப் பயணம். நம்பிக்கை கொண்டிருப்பவர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

 

2 comments:

  1. Faith vision sees the hand of GOD in everything.
    🙏

    ReplyDelete
  2. தாங்கள் வாழவேண்டிய வாழ்வின் நெறிமுறைகளிலிருந்து பிறழ்பவர்களைக் கண்டிக்கும் இயேசு, தன்னால்…தன் செய்தியால் மனமாற்றம் பெற்றவர்களுக்காகத் தன் தந்தைக்கு நன்றி கூறுகிறார்.நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் இறைவனிடமிருந்து வருகிறது என்று நம்புபவர்களுக்கே இது சாத்தியம் என்கிறார் தந்தை. நாமும் நம் அன்றாட வாழ்வில் இந்த “இறை நம்பிக்கை உணர்வை” மையமாக வைத்து வாழ, உந்துதல் வார்த்தைகளை உதிர்க்கும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete