Friday, February 19, 2021

பாவிகளையே

இன்றைய (20 பிப்ரவரி 2021) நற்செய்தி (லூக் 5:27-32)

பாவிகளையே

இயேசு லேவியை அழைக்கும் நிகழ்வே இன்றைய நற்செய்தி வாசகம்.

தன் இலக்கு என்ன என்பதை இயேசு தெளிவாக அறிந்துள்ளார். அந்த இலக்கோடு எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமலும் இருக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், சமரசம் செய்துகொள்ளாத வாழ்வே மேன்மையான வாழ்வு என மொழிகிறார் இறைவாக்கினர் எசாயா.

நம் வாழ்விலும் சமரசம் செய்துகொள்ளாத இலக்குகள் இருத்தல் நலம்.

2 comments:

  1. "சமரசம் செய்து கொள்ளாத இலக்குகள்"

    தங்களது" வலைப்பூ " போன்று.👍

    ReplyDelete
  2. வாழ்வின் பல நேரங்களில் நமக்குக் குழப்பம் நம் கண்களை மறைக்க இதுவா இல்லை அதுவா என குழம்புகிறோம். தெளிவாக யோசித்து ஒன்றைக் கைக்குள் திணித்த பிறகு அதைவிட இன்னொன்றை நல்லதெனக் கண்டு கையில் திணித்ததை கை நழுவச்செய்தல் அழகல்ல. இதைத்தான் “ சமரசம்” என்கிறார் இயேசு. எண்ணித் துணிந்த ஒரு கருமத்தை துணிந்தபின் இழுக்கு என ஒருவன் நினைப்பானேயனால் அவன் வேறு ஒன்றோடு சமரசம் செய்து கொள்கிறான்.

    இறை இயேசுவின் வழியில்....ஏசாயாவின் வழியில் நம் வாழ்விலும் சமரசம் இல்லாத இலக்குகளைத் தேடுவோம். அதில் நிலைத்திருப்போம். வாழ்வின் முக்கியமான ஒரு பக்கத்தை அழகாகவும், தெளிவாகவும் அலசியிருக்கும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete