Monday, August 21, 2023

இறைவனின் திருவுளத்தோடு இணைந்து

இன்றைய இறைமொழி

செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023

ஆண்டின் பொதுக்காலம் 20-ஆம் வாரம்

நீத 6:11-24. மத் 19:23-30.

இறைவனின் திருவுளத்தோடு இணைந்து

கிதியோன் என்னும் நீதித்தலைவரின் அழைப்பைப் பதிவு செய்கிறது இன்றைய முதல் வாசகம். கிதியோன் மனாசே குலத்தைச் சார்ந்தவர். மிதியானியர்களிடமிருந்து இஸ்ரயேல் மக்களைக் காப்பாற்றுகிறார் இவர். ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, 'வலிமை மிக்க வீரனே, ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்' என்று சொன்னபோது, கிதியோன் உடனடியாக, 'ஆண்டவர் எங்களோடு இருக்கிறார் என்றால், எங்களுக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? நாங்கள் ஏன் அடிமைகளாக இருக்கிறோம்?' எனக் கேட்கிறார். ஆண்டவராகிய கடவுள் தங்களோடு இருந்தால் மட்டுமே தங்களுக்கு வெற்றி என்பதை உணர்ந்தவராக இருக்கிறார். 

சீடத்துவத்துக்கான தடையாக செல்வம் இருக்கிறது என எச்சரிக்கிறது நற்செய்தி வாசகம். செல்வத்தின் ஆபத்து, கடவுளிடம் சராணகதி, நிலைவாழ்வு என்னும் பரிசு என்று மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது இந்த வாசகம். செல்வம் நமக்குத் தன்நிறைவைக் கொடுப்பதன் வழியாக ஒரு வகையான பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கிறது. கடவுளிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் நம்மை அந்நியமாக்குகிறது. 'என் கையே இதைச் செய்தது' என்னும் உணர்வைத் தருகிறது.

இறைவனின் திருவுளத்தோடு இணைந்து செயல்படுதலே நீடித்த வெற்றியைத் தருகிறது.


No comments:

Post a Comment