Thursday, August 17, 2023

உங்களுக்குக் கொடுத்தவையே

இன்றைய இறைமொழி

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023

ஆண்டின் பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு

யோசுவா 24:1-13. மத்தேயு 19:3-12.

உங்களுக்குக் கொடுத்தவையே

1. யோர்தான் நதியைக் கடக்கிற இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழைகிறார்கள். அவர்களைச் செக்கேமில் ஒன்றுகூட்டுகிற யோசுவா, ஆண்டவர் இதுவரை அவர்களுக்குச் செய்த அரும்பெரும் செயல்களை எடுத்துரைக்கிறார். 'இது நிகழ்ந்தது உங்கள் வாளாலும் அன்று, அம்புகளாலும் அன்று' என்று சொல்வதுடன், அவர்கள் குடியேறுவதற்கு முன்னரே ஆண்டவராகிய கடவுள் அனைத்தையும் அவர்களுக்குத் தயாராக வைத்திருந்தார் எனவும் எடுத்துச் சொல்கிறார். ஆண்டவரின் பராமரிப்புச் செயலை யோசுவா எடுத்துரைக்கக் காரணம் அவர்கள் யாவே இறைவனுக்கு நன்றி உள்ளவர்களாக இருந்து, அவருடைய கட்டளைகளுக்கு ஏற்ப வாழ வேண்டும் என்பதுதான். ஆனால், அவர்கள் தொடர்ந்து சிலைவழிபாட்டுக்குள் விழுவார்கள். உடன்படிக்கையை மறப்பார்கள். 

2. நற்செய்தி வாசகத்தில் மணஉறவு, மணமுறிவு, மற்றும் மணத்துறவு என்னும் மூன்று கருத்துருகள் காணப்படுகின்றன. படைப்பின் தொடக்கத்திலேயே ஆண்டவராகிய கடவுள் ஆணும் பெண்ணும் இணைந்திருப்பதை விரும்புவதால் மணமுறிவு ஏற்புடையது அல்ல. அதே வேளையில், இறையாட்சியின் பொருட்டு மணத்துறவு ஏற்பதும் சிறப்பே. 

3. இவ்விரு வாசகங்களையும் இணைத்துப் பார்க்கும்போது, கடவுள் நிர்ணயித்துள்ளபடியே அனைத்தும் நடந்தேறுகிறது எனவும், கடவுளின் விருப்பத்திற்கு முரணாக நடப்பது தவறு எனவும் புலப்படுகிறது. மேலும், ஆண்டவராகிய கடவுளின் பராமரிப்புச் செயலை நம் அன்றாட வாழ்வில் உணர்ந்து அதன்படி வாழ்தல் சிறப்பு.


No comments:

Post a Comment