Wednesday, August 16, 2023

வறண்ட தரை வழியாக

இன்றைய இறைமொழி

வியாழன், 17 ஆகஸ்ட் 2023

ஆண்டின் பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு

யோசுவா 3:7-10, 11, 13-17. மத்தேயு 18:21-19:1.

வறண்ட தரை வழியாக 

1. மோசேயின் மறைவுக்குப் பின்னர் யோசுவாவின் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழைகிறார்கள். கால் நனையாமல் செங்கடலைக் கடந்ததுபோலவே யோர்தான் ஆற்றையும் கடக்கிறார்கள். மோசே மற்றும் யோசுவா ஆகியோரின் செயல்பாடுகள் இரு நிகழ்வுகளிலும் மாறுபட்டு இருக்கின்றன. அங்கே மோசே செங்கடலைத் தன் கோலால் அடித்துப் பிரிக்கிறார். இங்கே ஆண்டவரின் குருக்கள் உடன்படிக்கைப் பேழையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்குள் இறங்குகிறார்கள். 

2. நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் குழுமப் போதனை தொடர்கிறது. மன்னிப்பு குழும வாழ்வின் முக்கியமான பண்பாக முன்வைக்கப்படுகிறது. நாம் இறைவனிடமிருந்து மன்னிப்பு பெற்றிருப்பதால் ஒருவர் மற்றவரை மன்னிக்கும் கடமை உண்டு என்னும் செய்தி தரப்படுகிறது.

3. ஆண்டவருடைய உடனிருப்பில் தண்ணீர் என்னும் தடை மறைந்து வறண்ட தரை பிறக்கிறது. நாம் ஒருவர் மற்றவரை நம் குழுமத்தில் மன்னிக்கும்போது புதிய வழி பிறக்கிறது.


No comments:

Post a Comment