Monday, November 10, 2014

எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்!

எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்!

திருத்தூதர்கள் இயேசுவிடம் கேட்கும் மிகச் சில விண்ணப்பங்களில் இதுவும் ஒன்று.

ஆனால் இயேசு நம்பிக்கையை மிகுதியாக்கும் வழியைச் சொல்லாமல் நம்பிக்கை மிகுந்தால் என்னவாகும் என்று மட்டும் சொல்லி முடிக்கின்றார்.

நம்பிக்கை என்பது தனிநபரைப் பொறுத்ததுதான் போல.

எவ்வளவோ பேர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகச் சொல்லிக் கொள்கிறோம்.

ஆனால் இன்னும் ஒரு சின்னக் கல் கூட நகர்ந்ததில்லையே.

அப்படியென்றால் நம்பிக்கை இன்னும் தேவை போல!

1 comment:

  1. சிலசமயங்களில் நாம். கடவுளுக்கு இணையாக நினைப்பவர்கள் வழுவும்போது நம் இறை நம்பிக்கை ஆட்டம் காண்பது இயற்கைதான்.நமது நம்பிக்கையின் மூலம் சின்னக்கல்லை இடம் பெயர்த்த முடியாமல் போயிருக்கலாம்.ஆனாலும் பெரிய கற்கள் நம் தலையை பதம்பார்க்காமல் பாதுகாப்பது நம் நம்பிக்கைதானே! இதை நம்புவதற்குக்கூட ஒரு 'இறைநம்பிக்கை' தேவை.அனைவருக்கும் இந்த வாரம் இனிதாக அமைந்திட வாழ்த்துக்கள்!

    ReplyDelete