Thursday, August 4, 2016

அவரின் பெண்மை

'நாத்திகம் - மனித மூளையின் ஓர் அங்கம்' என்ற ஒரு கட்டுரையை வாசித்தேன்.

அறிவியலுக்கும், நம்பிக்கைக்கும் உள்ள உரையாடல் மனித மூளையில் தொடங்குகிறது என தன் கட்டுரையை ஆரம்பிக்கும் ஆசிரியர், மனித மூளையின் இரண்டு கூறுகளை விளக்குகின்றார்.

பகுப்பாய்வு செய்யும் மூளை (analytical brain),  பரிவு காட்டும் மூளை (empathetic brain) என நம் மூளை இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது.

பகுப்பாய்வு செய்யும் மூளைதான் நாத்திகத்தின் ஊற்றுக்கண்.

பரிவு காட்டும் மூளை நம்பிக்கையின் ஊற்றுக்கண்.

பெண்களுக்கு இயல்பாகவே பரிவு காட்டும் மூளையின் செயல்பாடு அதிகம் இருப்பதால் அவர்களால் எளிதில் இறைநம்பிக்கை கொள்ள முடிகிறது. ஆன்மீகத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது.

பகுப்பாய்வு செய்யும் மூளைதான் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து குழப்பிக் கொள்கிறது.

நாத்திகம் - நம்பிக்கை என்ற அடிப்படையில் மட்டுமல்ல.

என்னைப் பொறுத்தவரையில் நாம் அடுத்தவரைப் பார்க்கும் பார்வையும் இந்த இரண்டு நிலைகளில் தான் இருக்கிறது.

சிலரை நாம் பகுப்பாய்வு செய்து பார்க்கிறோம். சிலரை நாம் பரிவு கொண்டு பார்க்கிறோம்.

பகுப்பாய்வு செய்து பார்க்கும் போது அடுத்தவரை நாம் ஒரு பிரச்சினையாகவும், பரிவு கொண்டு பார்க்கும்போது நாம் அடுத்தவரை ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்துகிறோம்.

இயேசுவுக்கு பரிவு கொண்ட பார்வை அதிகம் இருந்தது.

ஆகையால்தான் ஒன்றுக்கும் உதவாமல் கூடி நின்ற மக்களைப் பார்த்து, 'அறுவடை' என்கிறார்.

பகுப்பாய்வு செய்து பார்த்தால் வெறும் 'பதராக' தெரியும் மக்கள் கூட்டம் இயேசுவுக்கு மட்டும் 'அறுவடை' என்று தெரிகின்றது.

இதிலிருந்து மற்றொன்றும் புலப்படுகிறது.

வரலாற்று இயேசுவை வேண்டுமானால் நாம் 'ஆண்' என்று சொல்லலாம்.

ஆனால், கிறிஸ்துவை 'பெண்' என்றும் அழைப்பதில் தவறில்லை. அவரின் பரிவு காட்டும் பார்வையே அவரின் பெண்மை.


6 comments:

  1. தங்கள்ஆய்வு தவறானது.நல்ல சமாரியன் பரிவு கிருஸது கல்வாரி சிலுவையில் தொங்கிய வேளையில், தன் துன்பத்தின் மீது கவனம் கொள்ளாமல், அருகே துன்பப்பட்ட கள்வர் மீது இயேசுவின் கவனம் திரும்பியது. உயிர்த்தபின், கல்லறை அருகே கண்ணீர் வடித்த மகதலா மரியாவின் கண்ணீரைத் துடைப்பதில் இயேசு கவனம் செலுத்தினார்.இறைவனின் பன்பு பரிவு.

    ReplyDelete
  2. தங்கள்ஆய்வு தவறானது.நல்ல சமாரியன் பரிவு கிருஸது கல்வாரி சிலுவையில் தொங்கிய வேளையில், தன் துன்பத்தின் மீது கவனம் கொள்ளாமல், அருகே துன்பப்பட்ட கள்வர் மீது இயேசுவின் கவனம் திரும்பியது. உயிர்த்தபின், கல்லறை அருகே கண்ணீர் வடித்த மகதலா மரியாவின் கண்ணீரைத் துடைப்பதில் இயேசு கவனம் செலுத்தினார்.இறைவனின் பன்பு பரிவு.

    ReplyDelete
  3. தங்கள்ஆய்வு தவறானது.நல்ல சமாரியன் பரிவு கிருஸது கல்வாரி சிலுவையில் தொங்கிய வேளையில், தன் துன்பத்தின் மீது கவனம் கொள்ளாமல், அருகே துன்பப்பட்ட கள்வர் மீது இயேசுவின் கவனம் திரும்பியது. உயிர்த்தபின், கல்லறை அருகே கண்ணீர் வடித்த மகதலா மரியாவின் கண்ணீரைத் துடைப்பதில் இயேசு கவனம் செலுத்தினார்.இறைவனின் பன்பு பரிவு.

    ReplyDelete
  4. தங்கள்ஆய்வு தவறானது.நல்ல சமாரியன் பரிவு கிருஸது கல்வாரி சிலுவையில் தொங்கிய வேளையில், தன் துன்பத்தின் மீது கவனம் கொள்ளாமல், அருகே துன்பப்பட்ட கள்வர் மீது இயேசுவின் கவனம் திரும்பியது. உயிர்த்தபின், கல்லறை அருகே கண்ணீர் வடித்த மகதலா மரியாவின் கண்ணீரைத் துடைப்பதில் இயேசு கவனம் செலுத்தினார்.இறைவனின் பன்பு பரிவு.

    ReplyDelete
  5. GITA - New York.

    Dear Fr. YESU:

    Your distinction of analytical and empathetic brain is to be commented.

    Yet I have a question for you.

    Is it possible that EVEN empathetic brain can lead me to atheism, upon painfully watching the accumulated evils that are being heaped on humanity?

    See...I am traveler on Route 1-97, that is from Jerusalem to Jericho.

    In fact you don't exactly know if I am making a pilgrimage from Jerusalem to Jericho or FROM JERICHO TO JERUSALEM.

    To tell you the truth, I am not a great lover of any Jesusalems at all.

    Coming to the point, I find a devout Jew, stripped of his clothes, beaten, and left by the roadside half dead.

    Even as this unfortunate man and his RELIGION hates me to the core, I see him, take pity on him, go to him, bandage his wounds as I pour oil and wine, put the man on my donkey [I do the walking], take him to an inn, take care of him, break my journey for a day, stay overnight, and pay for his extra expense...

    As I continue to my travel by a third route - neither to worship in Jerusalem nor to Jericho to pursue any financial dealings -, all the empathy [the empathetic brain]I possess toward that Jew tease and tickle me to think about so much of dark evil out there [the analytical brain]
    force me along the path of atheism...and not belief in God!

    ReplyDelete
  6. " பகுப்பாய்வு செய்து பார்த்தால் 'பதராகத்' தெரியும் கூட்டம் இயேசுவுக்கு மட்டும் 'அறுவடை' என்று தெரிகிறது. ஒவ்வொரு ஆணிலும் சிறிது பெண்மையும்,ஒவ்வொரு பெண்ணிலும் சிறிது ஆண்மையும் கலந்தே இருப்பதாகச் சொல்கிறது உளனாய்வு.இயேசுவுக்கு சராசரி ஆண்களிடமிருந்ததை விட பெண்மை கொஞ்சம் கூடுதலாகவே இருந்திருக்க வேண்டும். 'லாசரின் இறப்பு' நிகழ்வு ஒன்று போதாதா அவரின் 'பரிவைப்' பறைசாற்ற?! நாமும் கூட அடுத்தவரைப் பகுத்தறிந்து பார்ப்பதைத் தவிர்த்து பரிவோடு பார்க்கப் பழகலாமே! " கிறிஸ்துவின் பெண்மை கலந்த, பரிவு காட்டும் பார்வைக்காக அவரைப் பெண் என்று அழைப்பதில் தவறில்லை"... .. பெண்ணினத்திற்குப் பெருமை சேர்க்கும் இந்த வரிகளுக்காகத் தந்தையே தங்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete