Wednesday, August 17, 2016

யோனா - 1

முதல் ஏற்பாட்டின் யோனா இறைவாக்கினர் மீட்பு வரலாற்றில் மிக முக்கியமானவர். இயேசுவே தன்னை இவரோடு ஒப்பிடுவதுதான் இதற்குக் காரணம்.

இந்த நூலையும், இந்த நபரையும் பற்றி கொஞ்சம் தேடுவோம்.

எபிரேய மொழியில் 'யோனா' என்றால் 'புறா' என்பது பொருள்.

இந்த நூலில் 4 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரங்கள் 1, 3, மற்றும் 4 உரைநடை வடிவிலும், 2 மட்டும் பாடல் வடிவிலும் உள்ளன.

இந்த நூலில் நாம் மூன்று கதைமாந்தர்களைப் பார்க்கின்றோம்: யோனா, கடவுள், மற்றவர்கள்.

எதையும் கண்டுகொள்ளாத ஒரு மனிதனுக்கும், எல்லாவற்றையும் கண்டு கொள்ளும் ஒரு கடவுளுக்கும் இடையே உள்ள போராட்டமே கதையின் கரு.

ஒட்டு மொத்த நூலுமே மூன்று நாட்களில் நடைபெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றன. முதல் நாள்: யோனா தப்பிக்கிறார். இரண்டாம் நாள்: யோனா மனமாற்றம் பற்றி போதிக்கின்றார். மூன்றாம் நாள்: யோனா கடவுளோடு கோபித்துக் கொள்கிறார்.

யோனாவை பல நேரங்களில் ஒரு மறைமாவட்ட அருள்பணியாளருக்கு ஒப்பிடுகின்றனர்.

மறைமாவட்ட அருள்பணியாளரை வெகு விரைவில் தழுவிக் கொள்ளும் 'மனச்சோர்வு' இவரையும் அதிகம் பற்றிக் கொள்கிறது. ஆகையால்தான் எதன்மேலும் விருப்பம் இல்லாமல் இருக்கிறார்.

'மனச்சோர்வு' - ஒரு விநோதம்.

கடவுளிடமிருந்தும், மனிதரிடமிருந்தும் நம்மைத் தப்பிக்க வைக்கிறது இந்த உணர்வு.

யோனாவும் இப்படித்தான் தப்பி ஓடுகின்றார்.

நினிவே நகருக்கு அனுப்புகின்றார் அவரை கடவுள்.

ஆனால், அவரோ அதற்கு நேர் எதிராக உள்ள தர்சீசு நோக்கிப் புறப்படுகின்றார்.

சென்னைக்கு அனுப்பினால் கன்னியாகுமரி செல்கின்றார் யோனா.

3 comments:

  1. Anonymous8/18/2016

    Good Starting yesu. God bless us

    ReplyDelete
  2. தன் வாசகர்களை ஒரு பேரூந்து பயணத்திற்கு இட்டுச் சென்ற தந்தை சிறிது ஓய்வு, மற்றும் திருவிழாக்கள்,பாப்பாக்கள்,அப்பாக்கள் என்ற டைவர்ஷனுக்குப்பின் மீண்டும் மெய்ன் ரூட்டுக்கு இட்டுச் செல்கிறார்.ஆரம்ப வார்த்தைகளே அமர்க்களமாக இருக்கின்றன.' மனச்சோர்வு' பற்றிய ஒரு கண்ணோட்டம்.இது எல்லோருக்கும் பொதுவான ஒன்றே.நாம் ஒரு முழம் முன்னேறினால் நம்மை இரு முழங்கள் சறுக்கச்செய்வது இந்த மனச்சோர்வு தான்.இதிலிருந்து தப்பிக்க வழி தெரிந்தால் மனிதன் எதனையும் வென்று விடலாம். இந்த ' யோனா' எனும் இறைவாக்கினர் வழியாக இறைவன் எமக்குச் சொல்ல வரும் செய்தி என்ன? தெரிந்து கொண்டுபயனடையஆவலாயிருக்கிறோம் தந்தையே!கொடுப்பதைத்தாராளமாகஅலுங்கிக்குலுங்கிக்கொடுங்கள்.இறைவன் தங்களுக்கு நிறைவான உடல்,உள்ள சுகம் தந்து தங்களை அவரது மிகப்பெரும் கருவியாகப் பயன்படுத்த வேண்டுகிறேன்.!!!

    ReplyDelete
  3. GITA - New York

    Your introduction on Jonah is enchanting.

    I have a special love for this Prophet, as he is a sort of First-Ever Missionary [Retreat Preacher] of the Old Testament to the Pagan Neighbors.

    You write: "God buys Jonah a ticket to reach "CHENNAI" and preach there.

    And the poor guy is determined to catch a bus to "KANYA KUMARI..."

    I have a different take.

    I think God reserves a business class berth on behalf of Jonah to be in KANYA KUMARI.
    I say this as I belong to "her"!

    Jonah, the "DOVE", seems bent on flying high to Chennai to visit the Marina, the Mount Road and more...

    The story will surely develop and have a sad ending.

    Jonah is going to sit under that gourd plant in Chennai.
    The sun will rise.
    The east wind will burn him and the plant.
    The summer sun will beat upon his head until he becomes faint.
    Then he will pray, "I would be better off dead than alive."


    ReplyDelete