Monday, August 22, 2016

யோனா - 6

மூன்றாம் நாள் மீனின் வாயிலிருந்து கக்கப்படுகின்றார் யோனா.

அவர் விழுந்து கிடந்தது நினிவே நகரின் கரை.

அங்கே இறைவனின் வாக்கு இரண்டாம் முறை அவருக்கு அருளப்படுகின்றது.

'நான் சொல்லும் செய்தியை அவர்களுக்கு அறிவி' என்று சொல்லும் இறைவன் 'என்ன சொன்னார்?' என்று ஒரு குறிப்பும் இல்லை. இறைவனின் செய்தி அடுத்த வசனத்தில் சொல்லப்படுகிறது: 'இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்'

மூன்று நாளில் கடக்க வேண்டிய ஒரு நகரை ஒரே நாளில் கடந்தவராக இந்தச் செய்தியை அறிவிக்கின்றார் யோனா.

இரண்டு விடயங்கள் கவனிக்கத் தக்கவை:

அ. கடவுள் இரண்டாம் வாய்ப்பை தருகின்றார்

நம் வாழ்வில் நாம் முதல் வாய்ப்பை தவறவிட்டாலும், அவர் இரண்டாம் வாய்ப்பை தருகின்றார். அல்லது தன் திருவுளம் நிறைவேறும் வரை அவர் வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்.

ஆ. யோனாவின் வேகம்

யோனா எதற்காக இவ்வளவு வேகமாகச் சென்றார்?

'மூன்று நாள் வேலையை ஒரே நாளில் செய்துவிடும் புத்திசாலியா' இவர்?

அல்லது

'மூன்று நாள் செய்ய வேண்டியதை ஒரே நாளில் ஏனோதானோவென்று முடிக்கும் அவசரக்குடுக்கையா' இவர்?

ஆனால்,

யார், எப்படி கொடுத்தார்கள் என்பதை ஆராய்ச்சி செய்யாமல் உடனே ஏற்றுக்கொண்டு மனம் மாறுகின்றனர் நினிவே மக்கள்.

2 comments:

  1. இறைவனின் மாபெரும் கருணையை எடுத்தியம்பும் ஒரு பதிவு.நினிவே பட்டணத்தையும், அதன் மக்களையும் நாற்பது நாட்களுக்குள் அழிப்பதாகச் சொல்லியிருப்பினும் அம்மக்களின் மனமாற்றம் கண்டு தன் எண்ணத்தை மாற்றிக்கொள்கிறார் இறைவன்.இது குறித்து யோனாவுக்கு வருத்தமும்,கோபமும் ஒருங்கே பீறிட்டு வந்தாலும் அவர் தனது தூதுவர் என்பதை விட நினிவே மக்கள் ' 'தம்மவர்' என்ற எண்ணமே இறைவனிடம் மேலோங்கி நிற்கிறது.முதுபெரும் தந்தை அபிரகாமிடம் ' ஒரு நல்லவர் இருந்தால் கூட சோதோம் கொமாராவை அழிக்க மாட்டேன்' என்று கூறிய இறைவனின் கருணையை மீண்டும் இங்கே பார்க்கிறோம்.நினிவே நகர மக்களுக்கு காட்டிய கருணையை நமக்கும் காட்டுகிறார் இறைவன்.அதன் தன்மையைப் புரிந்து கொண்டு நம்மை, நம் வாழ்க்கைப் பாதையை மாற்ற வேண்டுமென சொல்லாமல் சொல்கிறார் தந்தை. "அடித்து நொறுக்கும் எஜமான் அல்ல; ஆனால் அணைத்துக்காக்கும் தந்தையே நம் இறைவன்" என்பதைப் புரிய வைத்த தந்தையின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. GITA - New York​

    Dear Fr. YESU:​

    ​​The picture you have attached to JONAH is fascinating.

    It looks as though the Prophet is walking out ​in a touch of grandiosity and show.

    ​Sort of Ruling party's Heavy Weights coming​ out of Chennai-Coimbatore-Trichy-Madurai Airports in that puffed up fashion.​
    Or one of my Superstars or Chevaliers hurrying to attend a well-deserved reception...​

    What might be in that hand-carrier​ of the Prophet​?

    A generous supply of Yahweh's MERCY to the people of Nineveh ... and me?

    In Chapter ONE, it was, "Set out for the great city of Nineveh, and preach against it; their wickedness has come up before me". [Jonah 1:2]

    Now in Chapter 3, "Set out for the great city of Nineveh, and announce to it the message that I will tell you"​.​ [Jonah 3:2]​

    "Wickedness crying before God" is significantly missing in Chapter 3.

    Is it that God does NOT bash a sinner - a second, third and seventy times seven times?
    Repeatedly calling him or her all sorts of names?
    Shaming him or her, His Church, His world?

    In either case, God calls Nineveh [the Assyrian City - notwithstanding its wickedness], "THE GREAT CITY".

    I tend to believe that Madurai, Chennai, Rome, Jerusalem...are "great cities".

    No.
    There are others.
    And God's list includes other cities.
    Other "GREAT" cities.

    ReplyDelete