Friday, June 14, 2013

எப்போ முடியும் எக்ஸாம்?

அஞ்சாம் வகுப்பு படிச்சப்போ எங்க ஊர் ஆரம்பப்பள்ளி வாத்தியார்
1991 மார்ச் மாசம் சொன்னார்
இந்த “முழுஆண்டுத் தோ்வு“ மிக முக்கியமானது.
இதுல படிச்சாதான் நீங்க மேல் வகுப்பு போகமுடியும்.
முக்கி முக்கி படிச்சோம்.
ஆரம்பப் பள்ளி முடிச்சோம்.

அடுத்த வருஷம் பொிய ஸ்கூல்.
எட்டாம் வகுப்பு வாத்தியாரும் அதையே சொன்னார்.
படிச்சோம். பாஸ் ஆனோம்.

பத்தாம் வகுப்பு வந்தோம்.
இந்த மார்க்தான் ரொம்ப முக்கியம்.
நல்லா படிக்கனும்.
படிச்சோம். நல்லா படிச்சோம்னு சொல்ல முடியாது!
பாஸ் ஆனோம்.

பன்னிரண்டாம் வகுப்பு.
பத்தாம் வரை தமிழ் வழிக்கல்வி.
பதினொன்றும் பன்னிரெண்டும் ஆங்கில வழி.
விழி பிதுங்கியது.
கண்ணைக் கட்டிக் காட்டில விட்ட மாதிாி இருந்துச்சு.


(a+b)2 = a2+b2+2ab
பாடம் சொன்னார் கணக்கு வாத்தியார்.
இந்தக் கணக்கை என் வாழ்க்கையில இதுவரைக்கும்
நான் பயன்படுத்தியதே இல்ல.

பியூரெட், பிப்பெட் உடைத்து
பொட்டாசியம் பொ்மாங்கனேட் நார்மாலிட்டி பார்த்தோம்.
பிங்க் கலரா வந்தா நிறுத்திடனும்.
சொன்னார் கெமிஸ்டிாி வாத்தியார்.
பக்கத்து ஸ்கூல் பிள்ளைங்க யூனிபார்ம் பார்க்கும்போதெல்லாம்
பொட்டாசியம் பொ்மாங்கனேட் ஞாபகமாகவே இருக்கும்.

ஃபிசிக்ஸ் லேப்ல பிராக்டிகல் பண்ண
எனக்கு ஹைட் பத்தலன்னு சொல்லி
வெறும் ரெக்கார்ட் நோட் மட்டும் எழுதச் சொன்னாங்க.

தவளை அறுத்து விலங்கியல் பாிச்சை.
செம்பருத்தி அறுத்து தாவரவியல் பாிட்சை.
எல்லாம் முடிந்தா இனி பாிட்சையே இல்லனு பார்த்தா.

சாமியார் படிப்புக்கு குருத்துவக் கல்லுாாில சேர
இங்கிலீஸ் எக்ஸாம்.
தமிழில புத்தகத்தை பாா்த்துதான நம்ம சாமியாரு வாசிக்கிறாரு
அப்புறம் எதுக்கு இங்கிலீஸ் - கேட்டாங்க அம்மா.

அங்க எக்ஸாம் முடிஞ்சுடும்னு பார்த்தா
அவங்க ரெண்டு வருஷம் எல்லா எக்ஸாமும் வச்சுட்டு
ஒரு டிரெயின்ல ஏற்றி ஃபிலாசபி - தியாலஜி படிக்க புனே அனுப்புனாங்க.
சாி.
அங்க நம்மள படிக்கச் சொல்ல மாட்டாங்கன்னு நம்பி ஏறி உட்கார்ந்தா...
அங்க ஒரு ஏழு வருசம். அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு பாிட்சை வச்சாங்க.

எல்லாத்தையும் முடிச்சு சாமியாா் ஆக்கிடுவாங்கன்னு பார்த்தா
நீங்க படிச்சதெல்லாம் செல்லாது.
செக்குலர் சப்ஜெக்ட் ஏதாவது படிக்கனும்னாங்க.

எல்லாரும் இங்கிலீஷ் படிக்கச் சொல்ல
யார் பேச்சையும் கேக்காம சோசியாலஜி படிச்சேன்.
பின் எம்பி எம்பி எம்.பி.ஏ.

எல்லாம் முடிச்சாலும் இன்னும் ஏதாவது படிக்கலாமே?
படிக்கலாம்...ஆனால் பாிச்சையெல்லாம் எழுத முடியாதே!

ஃபாாின் போனா பாிட்சை கிடையாது.
அங்கே போய் படி.
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
பாிட்சை முடியவில்லை.

இத யாா்ட்டயவாத புலம்பலாம்னு போன் பண்ணினா
போன்ல சொல்றாங்க
“ஃபாதர் நீங்க ரொம்ப ஜாலியா இருக்கீங்க!”

கககபோ!

என்று சொல்லிவிட்டுப் பாடப்புத்தகம் தேடினேன்!


2 comments:

  1. தமிழில புத்தகத்தை பாா்த்துதான நம்ம சாமியாரு வாசிக்கிறாரு
    அப்புறம் எதுக்கு இங்கிலீஸ் - கேட்டாங்க அம்மா.

    அண்ணா அருமையான பதிவு....

    ReplyDelete
  2. சாமி,
    இப்போது எப்படி?
    பரீட்சை இருக்குமே!🤔

    வாழ்க்கையே, ஒரு தேர்வு தானே, சகோ,

    எனினும் interesting பதிவு.

    ReplyDelete