Wednesday, February 22, 2023

வாழ்வைத் தெரிந்துகொள்

இன்றைய இறைமொழி

வியாழன், 24 பிப்ரவரி 2023

திருநீற்றுப்புதனுக்குப் பின்வரும் வியாழன்

இச 30:15-20. லூக் 9:22-25.

வாழ்வைத் தெரிந்துகொள்.

இன்றைய முதல் வாசகம் இணைச்சட்ட நூலின் இறுதிப் பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதுவே ஐநூலின் இறுதிப் பகுதியாகும். ஐநூலின் தொடக்கத்தில், தொடக்கநூலில், நம் முதற்பெற்றோர் நன்மை-தீமை அறியும் மரத்தைப் பற்றிக்கொள்கின்றனர். இணைச்சட்ட நூலில் வாழ்வைப் பற்றிக்கொள்ளுமாறு அழைக்கிறார் மோசே. வாழ்வைத் தெரிந்துகொள்தல் என்பது கடவுளைத் தெரிந்துகொள்தல் ஆகும். கடவுளைத் தெரிந்துகொள்வதால் ஒருவர் வளமை பெறுகிறார்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் இறப்பை முதன்முறை அறிவிக்கிறார். தொடர்ந்து சீடத்துவம் பற்றியும் அறிவுறுத்துகின்றார். தன் வாழ்வை இழப்பதால் அதைப் பற்றிக்கொள்பவரே நற்சீடர்.

இரு வாசகங்களும் 'வாழ்க்கை' என்னும் ஒற்றைச் சொல்லில் சுழல்கின்றன. வாழ்க்கை நமக்கு சாத்தியமே. ஏனெனில், தெரிவு செய்யும் விருப்புரிமை நமக்கு உண்டு. 

பதிலுரைப்பாடல் நல்லார் மற்றும் பொல்லார் இயல்புகளை முன்வைத்து, நல்லார் போல் வாழ நம்மைத் தூண்டுகிறது.

சிந்திப்போம்: (1) இன்று என் விருப்புரிமையை நான் எப்படிப் பாராட்டுகிறேன்? (2) நான் வாழ்வைத் தெரிந்துகொள்கிறேனா? (3) எனக்கு வாழ்வு தருவது எது?


No comments:

Post a Comment