Monday, July 31, 2023

இரக்கமும் பரிவும்

இன்றைய இறைமொழி

செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023

பொதுக்காலம் 17-ஆம் வாரம்

விப 33:7-11. 34:5-9, 28. மத் 13:36-43.

இரக்கமும் பரிவும்

1. ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிலை சந்திப்புக் கூடாரத்தின்மேல் இறங்கி வருகிறது. சந்திப்புக் கூடாரத்திற்குள் செல்கிற மோசேயுடன் ஆண்டவராகிய கடவுள் முகமுகமாகப் பேசுகிறார். வாசகத்தின் இரண்டாவது பகுதியில், ஆண்டவர் மோசேயைக் கடந்து செல்கிறார். ஆண்டவராகிய கடவுளின் பெயர் இங்கே தரப்படுகிறது: 'ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன் ... சினம் கொள்ளத் தயங்குபவர். பேரன்பு மிக்கவர்.'

2. நற்செய்தி வாசகத்தில், வயலில் தோன்றிய கதைகளின் விளக்கத்தை முன்மொழிகிறார் இயேசு. உலக முடிவின் நிகழ்வுகளோடு இணைத்துப் பேசுகிற இயேசு, கடவுளின் நீதி வெளிப்படுவதை எடுத்துரைக்கிறார்.

3. இன்றைய வாசகங்கள் ஆண்டவராகிய கடவுளின் இரண்டு முகங்களைப் பார்க்கிறோம். ஒன்று, இரக்கம். இரண்டு, நீதி. இறைவனின் இரக்கமே மேலோங்கி நிற்கிறது. இறைவனின் இரக்கத்தை அனுபவிக்கிற நாம் அதை ஒருவர் மற்றவர்களுக்குக் காட்டுவது நலம்.


No comments:

Post a Comment