Sunday, July 10, 2016

நீதிமொழிகள் - 23

'பிள்ளாய்! தேன் சாப்பிடு. அது நல்லது. கூட்டினின்று ஒழுகும் தேன் உன் வாய்க்கு தித்திப்பாய் இருக்கும்.'
(நீமொ 24:13)

'தேன் கிடைத்தால் அளவோடு சாப்பிடு. அளவை மீறினால் தெவிட்டிப் போகும். நீ வாந்தியெடுப்பாய்.'
(நீமொ 25:16)

'தேனை மிகுதியாக சாப்பிடுவது நன்றன்று. புகழ்ச்சியை மிகுதியாக விரும்புவதும் நன்றன்று.'
(நீமொ 25:27)

'தேன்' என்ற வார்த்தையை அடுத்தடுத்து கையாளும் ஆசிரியர் அதை மூன்று அர்த்தங்களில் பயன்படுத்துகின்றார்.

அ. இனிமையாக இருக்கும் தேனை சாப்பிடு. அது நல்லது.

ஆ. அளவோடு சாப்பிடு. அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து.

இ. புகழ்ச்சி என்பது தேனைப் போன்றது. அதை அதிகம் விரும்பாதே.

இனிமையாக இருக்கும் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். இது முதல் பாடம்.

இனிமையாக இருக்கும் எதுவும் அளவோடும் இருக்க வேண்டும். இது இரண்டாம் பாடம்.

5 comments:

  1. வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் அத்தனையையும் இந்த "நீதிமொழிகள் நூல்" கொண்டுள்ளதைப் பார்க்கையில் மிகவும் விந்தையாக உள்ளது மட்டுமின்றி நம்மில் பலருக்கு இதைப்பற்றிய அறிவில்லையே என்ற எண்ணம் வருத்தத்தையும் தருகிறது.' தேன்' என்பது இரத்தம் சுத்திகரிக்கும் ஒரு திரவம் என நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.ஆனால் அதன் இனிமையையும்,அதற்கிணையான இனிமைமிகு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதையும் கூறும் நீதிமொழிநூல் ஆசிரியர் இனிமையான எதுவும் புகழ்ச்சி உட்பட அளவோடு இருக்க வேண்டுமெனக் கூறுகிறார்.தேன் கூட்டிலிருந்து தேனை எடுத்துப் பிழிந்து தருவதுபோல் நல்ல விஷயங்களைத் தேடித் தேடித் தரும் தந்தைக்கு என் நன்றியும், பாராட்டும்!!!

    ReplyDelete
  2. Short and sweet message... like honey...

    ReplyDelete
  3. Short and sweet message... like honey...

    ReplyDelete
  4. Anonymous7/18/2016

    super Yesu

    ReplyDelete
  5. கூட்டினின்று ஒழுகும் தேன் உன் வாய்க்கு தித்திப்பாய் இருக்கும்.(நீமொ 24:13)

    அதாவது தானாக தேனடையிலிருந்து மிகுதியாகி ஒழுகுவதை சொல்கிறாரா? அந்தத் தேனீக்கள் கஷ்டப்பட்டு சேகரித்து வைத்திருப்பதை திருடாதே, அதிலிருந்து ஒழுகுவதை உன் வாய்க்கு தித்திப்பாய் இருக்கும், அது உனக்கு நல்லது என்ற பொருளில் கூறியுள்ளாரா?

    ReplyDelete