Sunday, March 5, 2023

இரக்கம் ஆண்டவரிடம் உண்டு.

இன்றைய இறைமொழி

திங்கள், 6 மார்ச் 2023

தவக்காலம் 2ஆம் வாரம்

தானியேல் 9:4-10. லூக்கா 6:36-38.

இரக்கம் ஆண்டவரிடம் உண்டு.

இன்றைய முதல் வாசகத்தில் தானியேலின் இறைவேண்டலை வாசிக்கிறோம். இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கையை மறந்து பாவம் செய்கிறார்கள். அதனால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள். ஆனால், இறுதியில் ஆண்டவரின் இரக்கம் செல்கிறது.

நற்செய்தி வாசகத்தில், தம் சீடர்கள் வானகத் தந்தை போல இரக்கம் உள்ளவர்களாக இருக்குமாறு அறிவுறுத்துகிறார் இயேசு. நீதி மற்றும் இரக்கம் என்னும் இரு தளங்களில் நாம் செயலாற்ற இயலும். இரக்கம் என்னும் அளவையால் மற்றவர்களுக்கு அளக்கும்போது நாம் இறைவனுக்கு அருகில் வருகிறோம்.



No comments:

Post a Comment