Saturday, March 11, 2023

அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்!

இன்றைய இறைமொழி

சனி, 11 மார்ச் 2023

தவக்காலம் 2ஆம் வாரம்

மீக்கா 7:14-15,18-20. லூக்கா 15:1-3,11-32.

அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்!

எபிரேய விவிலியத்தின் இறுதி நூலான மீக்கா இறைவாக்கினர் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம் கடவுளின் இரக்கம் என்றென்றும் நிலைத்திருக்கிறது என்ற செய்தியைத் தருகிறது. நற்செய்தி வாசகத்தில் தந்தை தம் மகன்கள் இருவர்மேல் இரக்கம் காட்டுகிறார். மூத்தவர் தந்தையை விட்டு உள்ளத்தளவிலும், இளையவர் உடல் அளவிலும் செல்கிறார்.

நம்மீது இரக்கம் காட்டும் கடவுளும் தந்தையும் நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கிறார்கள்:

(அ) அடுத்தவர் நம் அன்பைத் திருப்பித்தரவில்லை என்றாலும் அவர்மேல் அன்பு.

(ஆ) மற்றவர்களின் தீமை என் நன்மைத்தனத்தை மாற்ற இயலாது.

(இ) மதிப்பு வெட்கம் என்னும் வரையறைகளைக் கடந்து வாழ்தல்.


No comments:

Post a Comment