Monday, November 28, 2022

ஆண்டவரின் ஆவி

நாளின் (29 நவம்பர் 2022) நல்வாக்கு

இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பு நிகழ்வில் மரியாவை வாழ்த்துகின்ற வானதூதர் கபிரியேல், மரியா தூய ஆவியால் கருவுருவார் என அறிவிக்கின்றார். தூய ஆவியார் இயேசுவின் பிறப்பு முதல் உயிர்ப்பு வரை செயலாற்றுவதைக் குறிக்கும் விதமாக அமைகின்றன இன்றைய வாசகங்கள்.

முதல் வாசகம் (எசா 11:1-10) 'ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்' என்னும் மெசியா இறைவாக்குப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆவியாரின் கொடைகளான ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப் பற்றிய அச்ச உணர்வு ஆகியவை இங்கே வரையறுக்கப்படுகின்றன.

நற்செய்தி வாசகத்தில் (லூக் 10:21-24) தூய ஆவியால் பேருவகையடைகின்ற இயேசு வானகத் தந்தையைப் புகழ்வதுடன், தம் சீடர்களின் பேறுபெற்ற நிலையையும் அறிக்கையிடுகின்றார்.

ஆவியாரின் கொடைகளை உறுதிப்பூசுதல் அருளடையாளத்தில் பெற்றிருக்கின்ற நாம் அவருடைய உடனிருப்பை எண்ணிப் பார்த்து இயங்குதல் நலம்.


No comments:

Post a Comment