Tuesday, March 7, 2017

யோனாவை விட பெரியவர்

இயேசு தன்னையே யோனாவைவிட பெரியவர் என்று முன்வைக்கின்றார்.

யார் இந்த யோனா?

'யோனா' என்றால் எபிரேயத்தில் புறா என்பது பொருள்.

இறைவன் ஒரு வேலைக்கு அனுப்பினால் இன்னொரு வேலைக்கு ஓடிப்போனவரும், வேண்டா வெறுப்பாக கடமைக்கு 'மனம் மாறுங்கள்' என்று நினிவே நகருக்குள் வலம் வந்தவரும்தான் யோனா.

இந்த யோனா பாய் நற்செய்தி அறிவித்த விதம் பற்றி கவலைப்படாமல் நற்செய்தியை அப்படியே ஏற்றுக்கொள்கின்றனர் நினிவே மக்கள். ஆக, தங்கள் வெற்றியின், வாழ்வின் அடையாளமாக அவர்கள் யோனாவைக் கொண்டாடினர்.

ஆனால், இயேசு தான் எதற்கு அனுப்பப்பட்டாரோ அந்த வேலைக்காக வருகின்றார். அந்த வேலையைச் செய்துமுடிக்கின்றார்.

அவர் யோனாவைவிட பெரியவர்.

ஆனால், அவரின் செய்தியைக் கேட்டு அவரின் சமகாலத்தவரும் மனம்திரும்பவில்லை.

நாமும் அந்த செய்தியை நீர்த்துப்போகச் செய்கின்றோம்.

ஆக, நாம் நினிவே மக்களை விட சிறியவர்கள்.

எதை எதற்காக செய்ய வேண்டுமோ அதை அதற்காக மட்டுமே செய்வது பெருமை! மற்றது சிறுமையே!

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. யோனா, நற்செய்தி அறிவித்த விதம் பற்றிக்கவலைப்படாமல் அதை அப்படியே ஏற்றுக்கொண்ட நினிவே மக்களைவிட, தான் அனுப்பப்பட்ட வேலைக்காகவே வாழ்ந்து மரித்த இயேசுவின் செய்தியை நீர்த்துப்போகச்செய்த சமகாலத்தவர் சிறியவரே என்கிறது இன்றையப்பதிவு.ஒப்பீடு நினிவே நகர மக்களுக்கும்,சமகாலத்தவருக்குமா இல்லை இயேசுவுக்கும்,யோனாவுக்குமா தெரியவில்லை.எது எப்படியோ...எதை எதற்காகச் செய்ய வேண்டுமோ அதை அதற்காகச் செய்வதே பெருமை என்பதை நம் மனத்திலுருத்தி, நமக்குப் பெருமை ஈட்டும் காரியங்களையே செய்வோம் என்பதைத் திண்ணமுடன் சொல்லும் தந்தைக்கு நன்றியும்,வாழ்த்தும்!!!

    ReplyDelete
  3. "மா தவம்" செய்து " மங்கையராய்ப்" பிறந்திட்ட அனைவருக்கும் "மகளிர் தின" வாழ்த்துக்கள்!!! அனைவரின் உள்ளங்களிலும்,இல்லங்களிலும் வளமும்,நலமும் ததும்பி வழிய வாழ்த்துகிறேன்!!!

    ReplyDelete