Tuesday, September 20, 2022

இறைவார்த்தையைக் கேட்டு

இன்றைய (20 செப்டம்பர் 2022) நற்செய்தி (லூக் 8:19-21)

இறைவார்த்தையைக் கேட்டு

'உம் சகோதரர்களும் தாயும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள்' என்று இயேசுவுக்குச் செய்தி சொல்லப்படுகின்றது. மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்தி நூல்களில், இப்படிச் சொல்லப்பட்டவுடன், 'யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?' எனக் கேள்வி கேட்டுப் பின்னர் விடையளிக்கின்றார் இயேசு. ஆனால், லூக்கா நற்செய்தியில் விடை நேரடியாக இருக்கின்றது.

இறைவார்த்தையை மையப்படுத்திய புதிய உறவுநிலையை முன்வைக்கின்றார் இயேசு.

இரத்த வகை, திருமண வகை உறவைத்தாண்டிய இந்த உறவு அனைவருக்கும் பொதுவானதாக மாறுகின்றது.

மரியா தன் வாழ்வில் தொடக்கமுதல் இறைவார்த்தையைக் கேட்டு அதற்கு பதிலிறுப்பு தருகின்றார்.

இந்த வகை உறவுக்கு என்ன தேவை?

(அ) இறைவார்த்தையைக் கேட்டல்.

(ஆ) அதன்படி நடக்க விரும்புதல்.

(இ) அதன்படி நடத்தல்.


No comments:

Post a Comment