Tuesday, August 20, 2013

குலசாமி



இன்று தெய்வத்திருமகள் திரைப்படம் பார்த்தேன்.

இரண்டு முறை ஏற்கனவே பார்த்திருந்தாலும்

இன்று பார்த்தபோது சற்று வித்தியாசமாகவே தெரிந்தது.

படத்தின் இறுதியில்...நான்கு பேர்...

மூன்று பெண்கள் - அனு, ஸ்வேதா, நிலா

ஒரு ஆண் - கிருஷ்ணா

இந்த நான்கு பேரை

இரண்டு இரண்டாகப் பிரித்தால்

இரண்டு குழந்தைகள்

இரண்டு அடல்ட்ஸ் (உடலிலும், மனதிலும்)

ஒரு ஆணிடம் இருக்கும் பெண்மையோடு இணைத்து

பெண்மையின் பெருமையையும் வெளிக்கொணர்கிறது

இந்த இறுதிக் காட்சி


சக்தியில்லையேல் சிவனில்லை

ஏன்..எவனுமில்லை என்று குலசாமியின் வரலாற்றைச்

சொன்ன 'குட்டிப்புலியின்' கதையும் இதுதான்.

பெண்மை போற்றுதும்!

தன் நலன் மறுத்து

மற்றவர் தினம் மறந்து

தன் உற்றவருக்காக

கண்களில் நீரைக் கருவாக்கும்

கண்மணிகள்

எல்லோர் வாழ்விலும் வரும் குலசாமிகள்...!

No comments:

Post a Comment