Thursday, December 15, 2022

சுடர்விடும் விளக்கு

இன்றைய (16 டிசம்பர் 2022) நற்செய்தி (யோவா 5:33-36)

சுடர்விடும் விளக்கு

கடந்த மூன்று நாள்களாக திருமுழுக்கு யோவானைப் பற்றிய பகுதிகளையே நற்செய்தியாக நாம் வாசித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவானின் செய்திக்குப் பதிலிறுப்பு செய்ய மறுத்த தன் சமகாலத்தவர்களைப் பற்றிப் பேசுகின்றார் இயேசு. 

யோவான் நற்செய்தியின் தொடக்கப் பாடலில் யோவான் ஒளிக்குச் சான்று பகர வந்ததாகப் பதிவு செய்கின்றார் நற்செய்தியாளர். தொடர்ந்து வரும் இப்பகுதியில், யோவான் சிறிய விளக்குக்கு ஒப்பிடப்படுகின்றார். 

விளக்கின் ஒளி அருகில் இருக்கும் அனைத்தையும் வெளிப்படுத்திக் காட்டுவதால் யோவானின் சமகாலத்தவர்கள் அதை விரும்பவில்லை.


No comments:

Post a Comment