Thursday, July 4, 2013

வண்ண ஓவியத்தூரிகையின் கதை

சிறுவன் தன் பாட்டி எழுதுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.  பாட்டி என்ன தான் எழுதுகிறார்கள் என்று பார்க்க அவனுக்கு ஆர்வம்! அருகில் சென்று, "என்ன பாட்டி எழுதுற? என்னைப் பற்றியா?" என வினவுகிறான்.  
பாட்டி எழுதுவதை நிறுத்தி விட்டு, தன் பேரனை மடியில் அமர வைத்து, “உன்னைப் பற்றி தான் எழுதுகிறேன் கண்ணா.....இங்கே பார். இது தான் பென்சில். வருங்காலத்தில் இந்த பென்சில் உனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.”
பேரன் பாட்டியிடம்," என்ன பாட்டி சொல்ற? இதுல அப்படி என்ன விசேஷம்? எனக்கு அப்படி ஒன்னும் தெரியல!".. தன் அறியாமையால் கேட்கிறான். பாட்டி புன் சிரிப்புடன், "ஒரு பொருளை நீ பார்க்கும் விதத்தில் தான் அதன் தன்மை மாறுபடுகின்றது. இதோ பார்... இது வெறும் எழுதுகோல் தான்... ஆனால் இது நமக்கு கற்று தரும் பாடம் சிந்திக்கக்கூடியது!! அதை நீ உணர்ந்து கொண்டால் உன் வாழ் நாளெல்லாம் அமைதியுடன் வாழலாம். "
இந்த எழுதுகோலுக்கு ஐந்து தன்மைகள் உண்டு.
முதலாவதாக:
இந்த பென்சிலைக் கொண்டு நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், உதாரணமாக எழுதலாம்,  ஓவியம் வரையலாம், அருகில் இருப்பவரை கூர் முனையால் குத்தலாம்... இன்னும் நிறைய செய்யலாம். அது உபயோகிப்பவரைப் பொறுத்தது. உன்னை உபயோகிப்பவர் இறைவன். அவர் உன்னை எப்பொழுதும் நன்மையானவற்றையே செய்ய உபயோகப்படுத்துவார். அழகான ஓவியத்தைத் தீட்ட பென்சில் பயன்படுவதைப் போல்அற்புதமான உன் வாழ்க்கையைத் தீட்ட, இறைவன் உன்னை உபயோகப்படுத்துகிறார்.
 இரண்டாவதாக:
 பென்சில் இருப்பவர்களிடம் கட்டாயம் அதை கூர்மையாக்குவதற்கு sharpener இருக்கும். எழுதிக்கொண்டிருக்கும் போதே பென்சில் முனை  உடைந்து விட்டால் என்ன செய்வோம்? பென்சிலைத் தூக்கி எறிந்து விடுவோமா? இல்லை. அதைக் கூர்மையாக்குவதற்கு   விரிசில் சீவியை(sharpener)ப் பயன்படுத்துகிறோம்நம் வாழ்விலும் பல தடைகள் வரலாம். நாம் வலுவிழந்து போகலாம். அந்த தருணங்களில் நம்மைக் கூர்மையாக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். அதாவது, என்னால் முடியும். நான் அனைவருக்கும் உபயோகமானவன். நான் பலசாலி. என்னால் எதையும் செய்ய முடியும், என்ற நம்பிக்கையை நம்முள் வளர்த்துக்கொள்ள வேண்டும். தடைகள் நம்மை வடிவமைப்பதற்கே..... வலுவிழக்கச் செய்ய அல்ல.
மூன்றாவதாக:
எழுதும் போது பிழை ஏற்பட்டு விட்டால், அழிப்பானைக் கொண்டு அழிக்கிறோம். நம் வாழ்வில் நாம் நம்மை அறியாமல் செய்யும் தவறுகள் கூட இப்படி தான். தவறு செய்து விட்டோமே என்று வருந்துவதை விட செய்த தவறை மறந்து விட்டு, இனி அந்த தவற்றை செய்யாமல் திருத்திக் கொள்ள முயற்சி செய்ய பழகிக் கொள்ளுங்கள்.
நான்காவதாக:
பென்சிலின் வெளிப்புறம் அழகாகவும் பல விதமான தோற்றத்துடனும் இருக்கும். ஆனால் அதன் உட்புறம் graphite இல்லை என்றால் அது எதற்கும் உதவாது. அதைப் போல் நம் வெளிப்புறம் தூய்மையாக இருந்தாலும், மனதையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்
ஐந்தாவதாக:
பென்சில் தன் தடயத்தை அதைக் கொண்டு எழுதும் ஒவ்வொரு இடத்திலும் விட்டுச் செல்கிறது. அதைப் போல் நாமும் நம்முடைய தடயத்தை, அதாவது நம் நல்ல செயல்களை, நம் நல்ல எண்ணங்களை, நம் அன்பை நாம் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் தடயங்களாக விட்டு செல்வோம்.
[ என்னை சிந்திக்க வைத்த காணொளி : The Story of the Pencil ]

1 comment:

  1. உண்மையிலேயே மிக அருமையான கருத்துள்ள கட்டுரை. நன்றி நண்பரே!

    ReplyDelete