நேற்று மாலை கவியரசு கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்' ஒலிநாடா கேட்டேன்.
வீடு பற்றிச் சொல்லும்போது, 'படி' மற்றும் 'நிலை' பற்றிச் சொன்னார்.
ஒவ்வொரு வீட்டிலும் இந்த இரண்டும் இருக்கும்.
வீட்டில் இருப்பவர் 'நிலை' போல உயர்ந்திருக்க வேண்டும் எனவும், உயர்ந்திருந்தாலும் 'படி'ந்து போக வேண்டும் என நினைவூட்டவுமே 'படி-நிலை' என்கிறார் கண்ணதாசன்.
திருக்குடும்பத்திலும் இந்த படியும் நிலையும் இருந்தது.
திருக்குடும்பம் மூன்று பண்புகளைக் கொண்டிருந்தது:
அ. பாதுகாப்பு
ஆ. பயணம்
இ. வளர்ச்சி
இந்தப் பண்புகள் நமதாகலாமே!