பார்வையற்ற இருவர் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர்.(காண். மத் 9:27-31)
இயேசு பார்வையற்ற இருவருக்கு பார்வை தருகின்றார்.
இயேசு தனது வீடு வந்து சேர்ந்தபோது அவர்களும் வந்தனர் எனப் பதிவு செய்கின்றார் மத்தேயு.
இயேசுவின் வீட்டிற்கு அந்தப் பார்வையாளர்களை அழைத்துச் சென்றது யார்?
இயேசுவே அழைத்துச் சென்றாரா?
அல்லது ஏதோ ஒரு நல்ல உள்ளம் அழைத்துச் சென்றதா?
கண் தெரியாத ஒருவரின் கைகளைப் பிடித்து நடந்திருக்கிறீர்களா?
நான் ஒருமுறை நடந்திருக்கிறேன்.
அவரை விட எனக்குத்தான் பயம் அதிகமாக இருந்தது அன்று.
பார்வையற்றவர்களை அழைத்து வந்தவர்களைப் பார்த்த பார்வையற்றவர் என்ன சொல்லியிருப்பார்?
'நன்றி' மட்டுமா?
இல்லை.
ஒளியாம் கிறிஸ்துவிடம் அழைத்து வந்த அவர் அவர்களுக்கு ஒளி பெற்றுத் தருகின்றார்.
'ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு' என்கிறார் திபா ஆசிரியர் (27:1).
நாமும் மற்றவர்களை இயேசுவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றால் எத்துணை நலம்!