இந்த உலகத்துல எல்லாமே ஈக்வல் என்று சொல்ல முடியுமா? ஏன் ஒன்று பெரியதாக மற்றொன்று சிறியதாக இருக்க வேண்டும்? ஏன் இந்த வேறுபாடு? இதைச் சரிசெய்யவே முடியாதா?
நம் கண்ணுக்குத் தெரிகின்ற அன்ஈக்வல் சிட்டுவேஷனே நிறைய இருக்க, நாமும் பல நேரங்களில் மற்றவரோடு ஒப்பீடு செய்து 'நான் ஒரு அன்ஈக்வல்' என்றும் 'நான் ரொம்ப லோ' என்றும் முடிவு செய்துவிடுகிறோம்.
நேற்றைய தினம் 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' திரைப்படம் பார்த்தேன். ஆங்கிலம் தெரியாத ஒரு சராசரி குடும்பப் பெண் தன் கணவனோடும், பிள்ளைகளோடும், தான் ஏதும் அறியாத அந்நிய நாட்டோடும் செய்யும் மனப்போராட்டத்தை மிக எதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கும் திரைப்படம்.
இங்கிலிஷ் தெரியாதது ஒரு குற்றமா? என்ற கேள்வியை முதலில் நம்மில் எழுப்பினாலும், இயக்குநர் கதையைக் கையாண்டிருக்கும் விதம் இங்கிலிஷையும் தாண்டி குடும்பம், கலாச்சாரம், மொழிக்கற்றல், தடைகளைத் தாண்டுதல், திருமணம், காதல், நட்பு, நகைச்சுவை என விரிகின்றது. நேரம் கிடைத்தால் கண்டிப்பாகப் பாருங்கள்.
மத்தவங்க நம்மள அன்ஈக்வல்னு சொல்ற வலியை விட நமக்கு நாமே 'நான் ஒரு அன்ஈக்வல்' என்று சொல்லும் வலிதான் மிகவும் கொடுமையானது.
நம்மகிட்ட இருக்கிற நம்மை அடையாளம் கண்டுவிட்டோம் என்றால் வெகு எளிதாக இந்த வலியை வென்று விடலாம்.
அந்த வெற்றிக்கு நம் அருகில் இருப்பவர்களும் உதவி செய்கின்றனர்.
'உன்னை உனக்குத் தெரிவதைவிட என்னை உனக்குத் தெரியும்' என்ற பாடல் வரி அந்த அப்பாவி மனைவி தன் கணவன் மேல் கொண்டுள்ள கரிசனையைக் காட்டும்.
இந்த அப்பாவி மனைவிக்கு அவளையே அடையாளம் காட்டும் நபராக அவளது வாழ்வில் நுழைவார் ஆங்கிலம் பயிலும் சக மாணவன் லாவ்ரண்.
நமக்கு அருகில் இருப்பவர்கள் நம்மை அடையாளம் காட்டுவது ஒரு பக்கம். நாமே நம்மை அறிந்து கொள்வது மறுபக்கம். இந்த இரண்டு பக்கங்களும் இணைந்தால் 'மற்றவர்கள் நம்மைச் செல்லாக் காசு' என நினைத்தாலும் நாம் செல்லும் காசுகளே!
நம் கண்ணுக்குத் தெரிகின்ற அன்ஈக்வல் சிட்டுவேஷனே நிறைய இருக்க, நாமும் பல நேரங்களில் மற்றவரோடு ஒப்பீடு செய்து 'நான் ஒரு அன்ஈக்வல்' என்றும் 'நான் ரொம்ப லோ' என்றும் முடிவு செய்துவிடுகிறோம்.
நேற்றைய தினம் 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' திரைப்படம் பார்த்தேன். ஆங்கிலம் தெரியாத ஒரு சராசரி குடும்பப் பெண் தன் கணவனோடும், பிள்ளைகளோடும், தான் ஏதும் அறியாத அந்நிய நாட்டோடும் செய்யும் மனப்போராட்டத்தை மிக எதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கும் திரைப்படம்.
இங்கிலிஷ் தெரியாதது ஒரு குற்றமா? என்ற கேள்வியை முதலில் நம்மில் எழுப்பினாலும், இயக்குநர் கதையைக் கையாண்டிருக்கும் விதம் இங்கிலிஷையும் தாண்டி குடும்பம், கலாச்சாரம், மொழிக்கற்றல், தடைகளைத் தாண்டுதல், திருமணம், காதல், நட்பு, நகைச்சுவை என விரிகின்றது. நேரம் கிடைத்தால் கண்டிப்பாகப் பாருங்கள்.
மத்தவங்க நம்மள அன்ஈக்வல்னு சொல்ற வலியை விட நமக்கு நாமே 'நான் ஒரு அன்ஈக்வல்' என்று சொல்லும் வலிதான் மிகவும் கொடுமையானது.
நம்மகிட்ட இருக்கிற நம்மை அடையாளம் கண்டுவிட்டோம் என்றால் வெகு எளிதாக இந்த வலியை வென்று விடலாம்.
அந்த வெற்றிக்கு நம் அருகில் இருப்பவர்களும் உதவி செய்கின்றனர்.
'உன்னை உனக்குத் தெரிவதைவிட என்னை உனக்குத் தெரியும்' என்ற பாடல் வரி அந்த அப்பாவி மனைவி தன் கணவன் மேல் கொண்டுள்ள கரிசனையைக் காட்டும்.
இந்த அப்பாவி மனைவிக்கு அவளையே அடையாளம் காட்டும் நபராக அவளது வாழ்வில் நுழைவார் ஆங்கிலம் பயிலும் சக மாணவன் லாவ்ரண்.
நமக்கு அருகில் இருப்பவர்கள் நம்மை அடையாளம் காட்டுவது ஒரு பக்கம். நாமே நம்மை அறிந்து கொள்வது மறுபக்கம். இந்த இரண்டு பக்கங்களும் இணைந்தால் 'மற்றவர்கள் நம்மைச் செல்லாக் காசு' என நினைத்தாலும் நாம் செல்லும் காசுகளே!
